இந்தியா

இமாச்சல பிரதேசத்தில் கிராமத்தை வெள்ளம் அடித்து சென்றது

Published On 2023-07-17 08:38 GMT   |   Update On 2023-07-17 08:38 GMT
  • கனமழையில் ஒட்டுமொத்த கிராமத்தையே வெள்ளம் அடித்து சென்றது.
  • உள்ளூர் நிர்வாகம் கிராம மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளது.

சிம்லா:

இமாச்சல பிரதேச மாநிலத்தில் ஏற்பட்ட மிக கனமழையால் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டது. கனமழையில் ஒட்டுமொத்த கிராமத்தையே வெள்ளம் அடித்து சென்றது.

ஸ்பிதி பகுதிக்கு அருகே அமைந்துள்ள கோலாக்சா என்ற கிராமத்தில் இருந்த வீடுகளும், விளை நிலங்களும் வெள்ளத்தில் மூழ்கி சின்னாபின்னமாகின. உள்ளூர் நிர்வாகம் கிராம மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளது.

அந்த கிராமத்தில் வாழும் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அனைத்துமே தற்போது வீடற்றவர்களாக இருக்கின்றனர்.

Tags:    

Similar News