இந்தியா

நாம் ஏன் தலையிட வேண்டும்?- பிரதமர் மோடியின் தியானம் குறித்த கேள்விக்கு டி.கே. சிவகுமாரின் பதில்

Published On 2024-05-30 14:42 GMT   |   Update On 2024-05-30 14:42 GMT
  • பிரதமர் மோடி 45 மணி நேரம் தியானம் மேற்கொள்கிறார்.
  • ஜூன் 1-ந்தேதி மாலை தியானத்தை முடித்துக் கொள்ள இருக்கிறார்.

பிரதமர் மோடி தேர்தல் பிரசாரம் முடிவடைந்த நிலையில் கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் செய்ய முடிவு செய்தார். இதற்காக கன்னியாகுமரி வந்து தியானத்தை தொடங்கியுள்ளார்.

ஜூன் 1-ந்தேதி (சனிக்கிழமை) மாலை வரை 45 மணி நேரம் தியானம் மேற்கொள்கிறார். இது தொடர்பாக கர்நாடகா மாநில துணை முதல்வர் டி.கே. சிவகுமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு டி.கே. சிவகுமார் பதில் அளிக்கையில் "கடவுள், பக்தி போன்றவை அவருடைய (பிரதமர் மோடி) தனிப்பட்ட விசயம். நாம் ஏன் தலையிட வேண்டும்?. அவருடைய பிரார்த்தனை மற்றும் தியானத்தில் நாம் ஏன் தலையிட வேண்டும்?" என்றார்.

கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலின்போது இதுபோன்று தேர்தல் பிரசாரத்தை முடித்துக் கொண்டு கேதர்நாத்தில் உள்ளி குகையில் தியானம் மேற்கொண்டார். தற்போது இந்தியாவின் தென்முனையான கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் மேற்கொள்கிறார்.

Tags:    

Similar News