இந்தியா

மேற்குவங்கத்தில் சரக்கு ரெயில் தடம் புரண்டு விபத்து

Published On 2024-07-31 09:31 GMT   |   Update On 2024-07-31 09:31 GMT
  • இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை
  • கடந்த ஜூன் மாதம் இதே பகுதியில் நடந்த ரெயில் விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர்

மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தின் ரங்கபாணி என்ற இடத்தில் சரக்கு ரெயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஜூன் மாதம் இதே பகுதியில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரெயில் மீது சரக்கு ரெயில் மோதியதில் 11 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று, மேற்கு வங்க தலைநகர் கல்கத்தாவில் இருந்து மும்பை சென்று கொண்டிருந்த ரெயில் ஜார்கண்ட் மாநிலத்தில் தடம் புரண்டது. இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். 20 க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டது.

Tags:    

Similar News