இந்தியா (National)
குஜராத்தில் நில நடுக்கம்- பொதுமக்கள் அச்சம்
- இந்த நில நடுக்கத்தால் வீடுகள் லேசாக குலுங்கியது.
- நில நடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருட் சேதமோ எதுவும் ஏற்படவில்லை.
கட்ச்:
குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் சில பகுதிகளில் இன்று காலை 10.05 மணிக்கு திடீர் நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் இது 3.3 புள்ளிகளாக பதிவானது.
இந்த நில நடுக்கத்தால் வீடுகள் லேசாக குலுங்கியது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். ஆனால் உயிர் சேதமோ, பொருட் சேதமோ எதுவும் ஏற்படவில்லை.
குஜராத் சவுராஷ்டிரா மற்றும் கட்ச் மாவட்டங்களில் சமீபகாலமாக அடுத்தடுத்து 4 நில நடுக்கங்கள் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.