இந்தியா (National)

பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து- 4 பேர் உயிரிழப்பு

Published On 2024-09-23 10:58 GMT   |   Update On 2024-09-23 10:58 GMT
  • 50 பேருடன் சென்ற பேருந்து 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
  • வளைவில் திரும்பும்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததாக தகவல்.

மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி அருகே தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

50 பேருடன் சென்ற பேருந்து 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு குழு, பேருந்தில் சிக்கியவர்களை மீட்டு வருகின்றனர்.

வளைவில் திரும்பும்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

40க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News