இந்தியா

வெப்ப அலை- நாடு முழுவதும் 143 பேர் உயிரிழப்பு

Published On 2024-06-22 04:30 GMT   |   Update On 2024-06-22 04:30 GMT
  • பஜாலி, பக்சா, கரீம்கஞ்ச் உள்ளிட்ட 19 மாவட்டங்களை வெள்ள நீா் சூழ்ந்துள்ளது.
  • கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் கரீம்கஞ்சில் வசிக்கும் 2.5 லட்சம் பேர் பாதிப்புக்குள்ளாயினா்.

புதுடெல்லி:

நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெப்ப அலையின் தாக்கம் நீட்டித்து வரும் நிலையில், கடந்த மாா்ச் 1-ந் தேதி முதல் ஜூன் 20-ந் தேதி வரையிலான காலகட்டத்தில் 'வெப்பவாதம்' காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 143-ஆக உயா்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

இருப்பினும், வெப்பவாதத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதுதொடா்பான முழுமையாக தகவல்களை மாநிலங்கள் வழங்காததால் தேசிய நோய்க் கட்டுப்பாட்டு மையத்தால் (என்சி.டி.சி.) வெளியிடப்படும் அறிக்கையில் அதிகாரபூா்வ உயிரிழப்புகள் குறித்த இறுதி தகவல்கள் இடம் பெறவில்லை. அதேபோல் சில சுகாதார மையங்களும் வெப்பவாதத்தால் உயிரிழந்தோா் குறித்த எண்ணிக்கையை முழுமையாக வெளியிடவில்லை.

வெப்பவாதத்தால் ஜூன் 20-ந் தேதி மட்டுமே 14 போ் உயிரிழந்ததாக அதிகாரப்பூா்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 9 போ் இதே காரணத்தால் உயிரிழந்திருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படும் நிலையில் மாா்ச் 1 முதல் ஜூன் 20 வரையிலான காலகட்டத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 114-யில் இருந்து 143-ஆக அதிகரித்தது.

அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் 35 பேரும் டெல்லியில் 21 பேரும் பீகாா் மற்றும் ராஜஸ்தானில் தலா 17 பேரும் உயிரிழந்தனா். வெப்பவாதத்தால் 41,000-க்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளனா்.

Tags:    

Similar News