இந்தியா

இந்தியா வராமல் வங்கதேசத்திலேயே போராடும் இந்துக்கள்: அசாம் முதல் மந்திரி

Published On 2024-08-24 12:42 GMT   |   Update On 2024-08-24 12:42 GMT
  • கடந்த ஒரு மாதத்தில் 35 முஸ்லிம் ஊடுருவல்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
  • அப்படி வருபவர்கள் பெங்களூரு, தமிழ்நாடு சென்று ஜவுளித் தொழில் வேலைக்காக செல்கின்றனர்.

கவுகாத்தி:

அசாம் முதல் மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

வங்கதேசத்தில் இருந்து கடந்த ஒரு மாதத்தில் ஒரு இந்து கூட இந்தியாவுக்குள் நுழைய முயன்றது கண்டறியப்படவில்லை.

இந்துக்கள் இந்தியாவிற்கு இடம்பெயராமல், பிரச்சனையால் பாதிக்கப்பட்ட வங்கதேசத்தில் தங்கி, போராடி வருகின்றனர்.

கடந்த ஒரு மாதத்தில் 35 முஸ்லிம் ஊடுருவல்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் உள்ளே நுழைய முயற்சிக்கிறார்கள், ஆனால் வருபவர்கள் பெங்களூரு, தமிழ்நாடு, கோயம்புத்தூர் சென்று ஜவுளித் தொழிலில் வேலை செய்ய உள்ளனர்.

இந்துக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் விதமாக வங்கதேச அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News