இந்தியா

காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு கொடுப்பதாக சுயேட்சை எம்.பி. பப்பு யாதவ் அறிவிப்பு

Published On 2024-06-10 11:19 GMT   |   Update On 2024-06-10 11:19 GMT
  • பீகாரின் பூர்ணியா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு பப்பு யாதவ் வென்றார்.
  • காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியை இன்று அவர் சந்தித்தார்.

பீகார் மாநிலம் பூர்ணியா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு வென்ற பப்பு யாதவ் மீண்டும் காங்கிரசில் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியை சந்தித்து தனது விருப்பத்தை அவர் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் காங்கிரஸ் எம்.பி.க்களின் எண்ணிக்கை 100 லிருந்து 101 ஆக அதிகரிக்க வாய்ப்புள்ளது.

ஏற்கனவே மகாராஷ்டிராவில் வெற்றி பெற்ற ஒரே ஒரு சுயேட்சை வேட்பாளரான விஷால் பாட்டில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News