இந்தியா

கெஜ்ரிவால் நவீன கால சுதந்திர போராட்ட வீரர்- டெல்லி அமைச்சர் கைலாஷ் கெலாட்

Published On 2024-08-15 11:00 GMT   |   Update On 2024-08-15 11:00 GMT
  • கல்வியறிவின்மை, வறுமை, வேலையின்மை மற்றும் நோய்களைத் தோற்கடிக்க சுதந்திரம் கிடைத்தது.
  • ஜனநாயகம் எந்த சக்தியாலும் பலவீனப்படுத்த முடியாத அளவுக்கு வலிமையானது.

சுதந்திர தினமான இன்று டெல்லி உள்துறை அமைச்சர் கைலாஷ் கெலாட் சத்ரசல் மைதானத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

பின்னர் அவர் பேசியதாவது:-

தேசியக் கொடியின் கீழ் நின்று, அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு நவீன சுதந்திரப் போராட்ட வீரர் என்று நான் பெருமையுடன் சொல்ல முடியும். ஏனென்றால், அவர் சிறைக்குச் சென்று டெல்லி மக்களுக்காக பாடுபடுவதற்கான தண்டனையை ஏற்றுக்கொண்டுள்ளார்.

ஆனால் எதிர்ப்புக்கு முன்னால் அவர் பணிந்தோ அல்லது உடைந்தோ போகவில்லை.

தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரை சிறையில் அடைக்க வேண்டும் என்பதற்காக நாட்டுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை. கல்வியறிவின்மை, வறுமை, வேலையின்மை மற்றும் நோய்களைத் தோற்கடிக்க இது கிடைத்தது.

டெல்லியில் உள்ள மக்களுக்கு தரமான கல்வி, சுகாதாரம், இலவச மின்சாரம் மற்றும் உலகத்தரம் வாய்ந்த போக்குவரத்து வசதிகளை வழங்குவதன் மூலம், இந்த நோய்களிலிருந்து நாட்டை விடுவிக்கும் முயற்சியை கெஜ்ரிவால் தொடங்கினார்.

கலால் கொள்கை வழக்கில் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21ம் தேதி கைது செய்யப்பட்டு தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவின் ஜனநாயகம் எந்த சக்தியாலும் பலவீனப்படுத்த முடியாத அளவுக்கு வலிமையானது, முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை சிறையில் இருந்து விடுவித்தது ஓர் உறுதியான உதாரணம்.

ஆம் ஆத்மி தலைமையிலான டெல்லி அரசு, கெஜ்ரிவால் விரும்புவது போல் பெண்களுக்கு இலவச மின்சாரம், கல்வி, சுகாதாரம் மற்றும் பேருந்து பயணங்களைத் தொடர்ந்து அளிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News