இந்தியா (National)

17-வயது மகள் காணாமல் போனதாக புகார்: தந்தையே பல வருடங்கள் கற்பழித்த கொடூரம்- விசாரணையில் அம்பலம்

Published On 2024-10-04 02:59 GMT   |   Update On 2024-10-04 02:59 GMT
  • புகாரின் பேரில் அடையாளம் தெரியாத நபர் மீது கடத்தல் வழக்கு பதிவு செய்து அந்த வாலிபரை போலீசார் தேடி வந்தனர்.
  • குற்றப்பிரிவு குழு போலீசார் சிறுமியை கண்டுபிடித்து அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

மும்பை:

17 வயதுடைய மகள் கடத்தப்பட்டதாக தந்தை அளித்த புகாரில் அவரே கைதாகி உள்ள சம்பவம் மும்பையில் நடந்துள்ளது. மேலும் சொந்த மகள் என்றும் பாராமல் பல ஆண்டுகளாக தந்தை கற்பழித்த அதிர்ச்சியூட்டும் சம்பவமும் வெளிவந்துள்ளது.

மத்திய மும்பையின் மகாலஷ்மி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி, தனத தந்தையின் கொடுமையால் விரக்தியடைந்து வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. சிறுமியை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியாததால் சிறுமியின் தந்தை டார்டியோ காவல் நிலையத்தில் தனது மகள் கடத்தப்பட்டதாக புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் பேரில் அடையாளம் தெரியாத நபர் மீது கடத்தல் வழக்கு பதிவு செய்து அந்த வாலிபரை போலீசார் தேடி வந்தனர்.

இதனிடையே, குற்றப்பிரிவு குழு போலீசார் சிறுமியை கண்டுபிடித்து அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போதுதான், சிறுமி தனது சொந்த தந்தையால் கடந்த 5 ஆண்டுகளாக கற்பழிக்கப்பட்ட அதிர்ச்சியூட்டும் தகவலை கூறியுள்ளார்.

இதையடுத்து, சிறுமியின் தந்தை மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரது தந்தையை கைது செய்துள்ளனர். மேலும் சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகு மேற்கொண்டு விசாரணை மேற்கொள்ளப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். 

Tags:    

Similar News