இந்தியா

முடா முறைகேடு: ராஜினாமா செய்ய சொல்ல பாஜக, ஜேடிஎஸ் தலைவர்களுக்கு தார்மீக உரிமை இல்லை- சித்தராமையா

Published On 2024-08-09 15:26 GMT   |   Update On 2024-08-09 15:26 GMT
  • எடியூரப்பாவுக்கு வெட்கம் இருக்குமென்றால், அரசியலில் இருந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும்.
  • குமாரசாமிக்கு என்ன தார்மீக உரிமை உள்ளது?. ஜந்தாகல் சுரங்க வழக்கை மறந்துவிட்டாரா?

முடா முறைகேடு தொடர்பாக சித்தராமையா முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி பாஜக மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவர்கள் மைசூரு நோக்கி (Mysuru Chalo) நடைபயணம் மேற்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா, "என்னை கேள்வி கேட்பதற்கு பாஜக மற்றும் ஜேடிஎஸ் கட்சி தலைவர்கள் யாருக்கும் தார்மீக உரிமை கிடையாது. மக்கள் அவர்களை விரட்ட வேண்டும்" என்றார்.

மேலும் சித்தராமையா கூறியதாவது:-

ஆங்கிலேயர்களை இந்தியாவிலிருந்து விரட்டியடிக்கும் வரலாற்று சிறப்புமிக்க வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் நினைவு தினம் ஆகஸ்ட் 9 ஆகும். பிற்படுத்தப்பட்ட, சுரண்டப்படும் மக்களை சகித்துக்கொள்ள முடியாத மனுவாதிகளையும், சாதிவெறியர்களையும், நிலப்பிரபுக்களையும் எதிர்க்க வேண்டும், கண்டிக்க வேண்டும்.

எடியூரப்பாவுக்கு வெட்கம் இருக்குமென்றால், அரசியலில் இருந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும். அவருக்கு 82 வயதாகிறது. போக்சோ சட்டத்தின்கீழ் அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. அவர் என்னை ஆகஸ்ட் 10-க்குள் ராஜினாமா செய்ய வேண்டும் என சொல்கிறார்.

அவருக்கு என்ன தார்மீக பொறுப்பு இருக்கிறது? அவர் ஒன்றிரண்டு மோசடிகள் மட்டுமா செய்தார்? 18 முதல் 20 மோசடிகளில் பிடிபட்டுள்ளாளர். விஜயேந்திராவும் பல மோடிசகளில் சிக்கியுள்ளார். பாஜக-வின் விஜயபுரா எம்எல்ஏ யட்னால், விஜயேந்திரா ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

குமாரசாமிக்கு என்ன தார்மீக உரிமை உள்ளது?. ஜந்தாகல் சுரங்க வழக்கை மறந்துவிட்டாரா? 20 நிறுவனங்கள் புதுப்பிக்க நீங்கள் அனுமதி கொடுத்தீர்கள். என்னை ராஜினாமா செய்ய சொல்ல உங்களுக்கு வெட்கமில்லையா?

அவர்கள் இப்போது பதில் சொல்ல வேண்டும். வெறுப்பு மற்றும் பழிவாங்கும் அரசியலை நான் ஒருபோதும் பின்பற்றவில்லை. நான் அப்படி இருந்திருந்தால் முதலில் இப்படி ஒரு நிலை வந்திருக்காது. சிறைக்கு சென்றிருப்பார்கள்.

இவ்வாறு சித்தராமையா தெரிவித்தார்.

Tags:    

Similar News