இந்தியா (National)

மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு- மேற்கு வங்காளத்தில் என்.ஐ.ஏ. சோதனை

Published On 2024-10-01 08:54 GMT   |   Update On 2024-10-01 09:14 GMT
  • என்.ஐ.ஏ. சோதனை 12 இடங்களில் நடத்தப்பட்டது.
  • சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டு காரணமாக மேற்கு வங்காள என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு முகமை) அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். 12 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

மேற்கு வங்காளத்தில் நேதாஜி நகர், பனிஹாட்டி, பாரக்பூர், சோடேபூர், அசன்சோல் மற்றும் பல இடங்களில் 2 பெண்கள் மற்றும் அவர்களது கூட்டாளிகளுக்கு மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் நிலையில் இந்த சோதனைகள் நடைபெற்றது.

இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

Similar News