இந்தியா

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் 10-ம் தேதி ரஷியா பயணம்

Published On 2024-09-08 10:44 GMT   |   Update On 2024-09-08 10:44 GMT
  • இரு நாட்டு அதிபர்களுடனும் இந்தியாவுக்கும், பிரதமர் மோடிக்கும் நல்லுறவு இருக்கிறது.
  • போரை முடிவுக்கு கொண்டுவர இந்தியாவின் முன்முயற்சியை உலகமே எதிர்பார்க்கிறது.

புதுடெல்லி:

ரஷியா-உக்ரைன் இடையே 2 ஆண்டுக்கு மேலாக போர் நடந்துவருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர அமைதிப் பேச்சு வார்த்தையில் இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகள் மத்தியஸ்தர்களாக செயல்பட முடியும் என ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்தார்.

இந்திய பிரதமர் மோடியின் ரஷியா, உக்ரைன் பயணத்துக்கு பிறகு புதின் இந்தக் கருத்தை தெரிவித்தார். இதே கருத்தை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் கூறியுள்ளார்.

இரு நாட்டு அதிபர்களுடனும் இந்தியாவுக்கும், பிரதமர் மோடிக்கும் நல்லுறவு இருக்கும் நிலையில், போரை முடிவுக்கு கொண்டுவர இந்தியாவின் முன்முயற்சியை உலகமே எதிர்பார்க்கிறது.

இந்நிலையில், அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னெடுக்கும் விதமாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வரும் 10 மற்றும் 11-ம் தேதிகளில் ரஷியாவில் சுற்றுப்பயணம் செய்கிறார். பிரிக்ஸ் மாநாட்டுக்காகச் செல்லும் அவர், ரஷியா மற்றும் சீனா நாடுகளின் உயரதிகாரிகள், அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். அஜித் தோவலின் இந்தப் பயணத்தின்போது ரஷிய அதிபர் புதினை அஜித் தோவல் சந்தித்துப் பேசுகிறார். அப்போது ரஷியா-உக்ரைன் மோதலை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாகவும், அமைதிக்கான முயற்சிகள் தொடர்பாகவும் விவாதிக்கலாம் என தகவல் வெளியானது.

Tags:    

Similar News