இந்தியா

போலீஸ் நிலையத்தின் மேற்கூரையில் ஏறிய காளை

Published On 2024-07-12 06:01 GMT   |   Update On 2024-07-12 06:01 GMT
  • போலீசாரும் அங்கு திரண்டு அந்த காளையை போலீஸ் நிலைய மேற்கூரையில் இருந்து கீழே இறக்க முயற்சித்தனர்.
  • கூட்டம் திரண்டதால் பீதி அடைந்த காளை மாடு மேற்கூரையில் இருந்து அருகே உள்ள வீட்டின் தகர கொட்டகை மீது பாய்ந்தது.

உத்தரபிரதேச மாநிலத்தின் ரேபரேலியில் உள்ள ஒரு போலீஸ் நிலையத்தின் மேற்கூரையில் காளை மாடு ஏறி நின்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ரேபரேலியில் சலோன் புறக்காவல் நிலையம் ஒன்று உள்ளது. இந்த போலீஸ் நிலையத்தின் மேற்கூரையில் காளை மாடு ஏறி நிற்பதை அப்பகுதி மக்கள் பார்த்தனர். உடனே அப்பகுதியில் கூட்டமும் திரண்டது. அவர்கள் அந்த மாடு மீது கம்புகளை வீசினர். அதற்குள் போலீசாரும் அங்கு திரண்டு அந்த காளையை போலீஸ் நிலைய மேற்கூரையில் இருந்து கீழே இறக்க முயற்சித்தனர்.

கூட்டம் திரண்டதால் பீதி அடைந்த காளை மாடு மேற்கூரையில் இருந்து அருகே உள்ள வீட்டின் தகர கொட்டகை மீது பாய்ந்தது. இதில் அந்த மாடு பலத்த காயம் அடைந்தது. பின்னர் அந்த மாட்டை மீட்டு கால்நடை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags:    

Similar News