இந்தியா (National)

லட்டில் மாட்டிறைச்சி கொழுப்பு.. சனாதன தர்ம பாதுகாப்பு வாரியம் அமைக்கக் கோரும் பவன் கல்யாண்

Published On 2024-09-20 09:55 GMT   |   Update On 2024-09-20 09:57 GMT
  • மாட்டிறைச்சி கொழுப்பை பிரசாதமாகச் தாங்கள் சாப்பிட்டுள்ளோம் என்பது பக்தர்களை அசவுகரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
  • ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் இதுபோன்ற குளறுபடிகள் நடக்காமல் இருக்க உபாயம் ஒன்றைச் சொல்லியுள்ளார்.

உலகம் முழுவதிலும் இருந்து கோடிக்கணக்கான இந்துக்கள் வருகை தரும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழங்கப்படும் லட்டுக்கள் தயாரிப்பில் ஜகன்மோகன் ஆட்சியின் போது மாட்டிறைச்சி கொழுப்பு கலந்த நெய்யைப் பயப்படுத்தியுள்ளதாகச் சர்ச்சை எழுந்துள்ளது. இந்து மதத்தின் மாடு புனிதமான விலங்காகக் கருதப்படும் நிலையில் கடந்த காலங்களில் மாட்டிறைச்சி கொழுப்பை பிரசாதமாகச் தாங்கள் சாப்பிட்டுள்ளோம் என்ற எண்ணம் பக்தர்களை அசவுகரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

இந்த விவகாரம் தொடர்பாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நடவைடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார். இந்நிலையில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் இதுபோன்ற குளறுபடிகள் நடக்காமல் இருக்க உபாயம் ஒன்றைச் சொல்லியுள்ளார்.

அதாவது, நாடு முழுவதும் உள்ள இந்து கோவில்களில் இதுபோன்ற பிரச்சனைகளை ஆராய தேசிய அளவில் 'சனாதன தர்ம பாதுகாப்பு[ரக்ஷனா] வாரியம்' என்ற அமைப்பை நிறுவும் நேரம் வந்துவிட்டது என்று தனது எக்ஸ் பக்கத்தில் கூட்டணியில் உள்ள மத்திய பாஜக அரசுக்கு யோசனை வழங்கியுள்ளார்.

Tags:    

Similar News