இந்தியா (National)

தெலுங்கானா வெள்ள நிவாரணத்துக்கு ரூ.1 கோடி நிதி வழங்கினார் பவன் கல்யாண்

Published On 2024-09-11 10:23 GMT   |   Update On 2024-09-11 10:23 GMT
  • தெலுங்கானாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர்.
  • ஆந்திராவில் உள்ள 400 பஞ்சாயத்துகளுக்கு தலா ₹1 லட்சம் என ₹4 கோடியை நிவாரண நிதியாக பவன் கல்யாண் வழங்கியுள்ளார்.

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர்.

ஆந்திராவிற்கு ரூ.1 கோடி ரூபாயை வெள்ள பாதிப்பு நிவாரணமாக அம்மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண் வழங்கியிருந்தார்.

மேலும் ஆந்திராவில் உள்ள 400 பஞ்சாயத்துகளுக்கு தலா ₹1 லட்சம் என ₹4 கோடியை தனியாகவும் அவர் வழங்கியுள்ளார்

இந்நிலையில், தற்போது தெலுங்கானா மாநிலத்திற்கும் ரூ.1 கோடி ரூபாயை வெள்ள பாதிப்பு நிவாரணமாக பவன் கல்யாண் வழங்கியுள்ளார்.

தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை நேரில் சந்தித்து ரூ.1 கோடி ரூபாய்க்கான காசோலையை அவர் வழங்கினார்.

Tags:    

Similar News