இந்தியா

அடுத்த 1000 ஆண்டுக்கான அடித்தளத்தை இந்தியா தயார்செய்து வருகிறது: பிரதமர் மோடி

Published On 2024-09-16 07:00 GMT   |   Update On 2024-09-16 07:00 GMT
  • முதலிடத்தை அடைவதில் மட்டும் கவனம் செலுத்தாமல், தரவரிசையைத் தக்கவைக்க வேண்டும்.
  • 21-ம் நூற்றாண்டில் இந்தியா சிறந்த விளங்கும் என்று இந்தியர்கள் மட்டும் இல்லை. உலகமே உணர்கிறது.

பிரதமர் மோடி குஜராத் மாநிலம் காந்திநகரில் 4-வது உலகளாவிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீட்டாளர்கள் சந்திப்பு மற்றும் கண்காட்சியை (RE-INVEST 2024) தொடங்கி வைத்தார்.

அப்போது பிரதமர் மோடி பேசும்போது கூறியதாவது:-

* மத்திய அரசின் 3-வது ஆட்சிக் காலத்தின் முதல் 100 நாட்களில் நாட்டின் விரைவான முன்னேற்றத்திற்காக அனைத்து துறைகளையும் காரணிகளையும் கையாள முயற்சித்தோம்.

* 140 கோடி இந்தியர்கள் நாட்டை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற்ற உறுதியளித்துள்ளனர்.

* நாட்டின் பன்முகத்தன்மை, அளவு, திறன், செயல்திறன் ஆகியவை தனித்துவமானது. அதனால்தான் உலகளாவிய பயன்பாட்டிற்கான இந்திய தீர்வுகளை நான் சொல்கிறேன்

* அயோத்தி மற்றும் 16 இடங்களை முன்மாதிரி சூரிய நகரங்களாக மேம்படுத்த பணியாற்றி வருகிறோம்

* அடுத்த 1000 ஆண்டுகளுக்கான அடித்தளத்தை தயார் செய்து வருகிறது. முதலிடத்தை அடைவதில் மட்டும் கவனம் செலுத்தாமல், தரவரிசையைத் தக்கவைக்க வேண்டும்.

* 21-ம் நூற்றாண்டில் இந்தியா சிறந்த விளங்கும் என்று இந்தியர்கள் மட்டும் இல்லை. உலகமே உணர்கிறது.

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

Similar News