இந்தியா

அரசியல் சாசனத்தை புனிதமாக கருதுபவன் நான்- பிரதமர் மோடி

Published On 2024-07-03 06:57 GMT   |   Update On 2024-07-03 07:01 GMT
  • NDA பெற்ற மிகப்பெரிய வெற்றியை இருட்டடிப்பு செய்ய முயற்சி நடைபெற்றது.
  • அரசியல் சாசனம் தான் நாட்டின் வளர்ச்சிக்கு வழிகாட்டும் ஒளி விளக்கு.

மாநிலங்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

* நாட்டில் 60 வருடங்களுக்கு பிறகு தொடர்ந்து 3வது முறையாக ஒரு அரசு பதவி ஏற்றுள்ளது.

* NDA பெற்ற மிகப்பெரிய வெற்றியை இருட்டடிப்பு செய்ய முயற்சி நடைபெற்றது.

* கடைசியில் எதிர்க்கட்சிகள் தற்போது தான் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளன.

* 10 வருட கடின உழைப்பிற்கு மக்கள் அளித்துள்ள விருதுதான் தேர்தல் வெற்றி.

* தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்கள் கொடுத்த வெற்றியை எதிர்க்கட்சிகளால் ஜீரணிக்க முடியவில்லை.

* எதிர்க்கட்சிகளின் தவறான பரப்புரையை தோற்கடித்து மக்கள் வெற்றியை வழங்கி உள்ளனர்.

* இந்தியாவின் அரசியல் சாசனத்தை எப்போதும் புனிதமாக கருதுபவன் நான்.

* அரசியல் சாசனம் தான் நாட்டின் வளர்ச்சிக்கு வழிகாட்டும் ஒளி விளக்கு என்று கூறினார்.


Tags:    

Similar News