இந்தியா

விருப்பத்திற்கு மாறாக திருமணம்.. இளம்பெண்ணை கொலை செய்து எரித்த குடும்பத்தினர்...

Published On 2024-07-05 07:20 GMT   |   Update On 2024-07-05 07:20 GMT
  • இளம்பெண்ணை கடத்தி சென்ற குடும்பத்தினர், அவரை கொலை செய்து உடலை எரித்தனர்.
  • போலீசார் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் பெண்ணின் உடல் 80 சதவீதத்துக்கும் மேல் எரிந்திருந்தது.

சாதி, மதம், படிப்பு, தகுதி, அந்தஸ்து, பொருத்தம் ஆகியவற்றை பார்த்து ஒரு மகன் அல்லது மகனுக்கோ திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்கின்றனர். இதெல்லாம் மீறி மகனோ அல்லது மகளோ தங்களது விருப்பம் இல்லாமல் காதல் திருமணம் செய்தால் அவர்களை கொலை செய்யும் அளவுக்கும் பெற்றோர் செல்கின்றனர்.

அப்படி ஒரு சம்பவம் தான் ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்றுள்ளது.

தங்கள் விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்ததற்காக 24 வயது இளம்பெண்ணை குடும்பத்தினர் கடத்தி சென்று கொன்று உடலை எரித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜலாவரில் பகுதியை சேர்ந்த 24 வயதுடைய இளம்பெண் ஒருவர் ரவி பீல் என்பவரை பெற்றோர் விருப்பத்திற்கு மாறாக திரமணம் செய்துகொண்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த இளம்பெண்ணின் குடும்பத்தினர் அப்பெண்ணை கொலை செய்ய முடிவு செய்துள்ளனர். இதை அறிந்த காதல் தம்பதி பல்வேறு இடங்களில் தங்கி தங்களது உயிரை பாதுகாத்து வந்தனர். இறுதியாக காதல் தம்பதியினர் வங்கிக்கு வரவுள்ள தகவல் அப்பெண்ணின் குடும்பத்தினருக்கு கிடைத்துள்ளது.

இதனால் வங்கிக்கு சென்ற குடும்பத்தினர் அங்கே காத்திருந்து, அப்பெண்ணை கணவரின் கண் முன்னே காரில் கடத்தி சென்றன. இதையடுத்து கணவர் போலீசில் புகார் அளித்தார். அதற்குள்ளாக அந்த இளம்பெண்ணை கடத்தி சென்ற குடும்பத்தினர், அவரை கொலை செய்து உடலை எரித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் பெண்ணின் உடல் 80 சதவீதத்துக்கும் மேல் எரிந்திருந்தது. போலீசார் வருவதை அறிந்த குடும்பத்தினர் அங்கிருந்து தலைமறைவாகிவிட்டனர்.

Tags:    

Similar News