இந்தியா

பள்ளி விடுதியில் எலி கடித்து 9 மாணவிகள் காயம்

Published On 2024-07-12 03:57 GMT   |   Update On 2024-07-12 03:57 GMT
  • மாணவிகளுக்கு ராமயம்பேட்டை மண்டலத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
  • எலி தொல்லையை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.

திருப்பதி:

தெலுங்கானா மாநிலம், மேடக் மாவட்டத்தில் உள்ள அரசு பெண்கள் பள்ளியின் விடுதியில் 9 மாணவிகளை எலி கடித்தது. அவர்களுக்கு ராமயம்பேட்டை மண்டலத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

எலி தொல்லையை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தனர். இதற்கிடையில், சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாணவிகளின் பெற்றோர்கள் விடுதியில் தூய்மை இல்லாதது குறித்து புகார் அளித்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News