இந்தியா (National)

சாவர்க்கர் மாட்டிறைச்சி சாப்பிட்டார்.. காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சை பேச்சு

Published On 2024-10-03 14:56 GMT   |   Update On 2024-10-03 14:57 GMT
  • சாவர்க்கர், அசைவம் உண்பவர். பசுவதைக்கு எதிரானவர் அல்ல.
  • பிராமணராக இருந்து கொண்டு மாமிசம் உண்பதை வெளிப்படையாக பிரசாரம் செய்து வந்தார்.

சாவர்க்கர் மாட்டிறைச்சி சாப்பிட்டார் என்று கர்நாடக சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டுராவ் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் தினேஷ் குண்டுராவ், "சாவர்க்கர், அசைவம் உண்பவர். பசுவதைக்கு எதிரானவர் அல்ல. அவர் மாட்டிறைச்சியையும் சாப்பிட்டு வந்ததாக சிலர் கூறுகின்றனர். பிராமணராக இருந்து கொண்டு மாமிசம் உண்பதை வெளிப்படையாக பிரசாரம் செய்து வந்தார்.

பாகிஸ்தானின் நிறுவனர் முகமது அலி ஜின்னா இஸ்லாத்தை மிக தீவிரமாக பின்பற்றுவர் அல்ல. அவர் பன்றி இறைச்சியைக் கூட சாப்பிட்டார். ஜின்னா முஸ்லிம்களுக்கு ஒரு அடையாளமாக மாறினார். அவர் ஒருபோதும் அடிப்படைவாதி அல்ல" என்று தெரிவித்தார்.

சாவர்க்கர் குறித்த காங்கிரஸ் அமைச்சரின் இந்த கருத்துக்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News