இந்தியா

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து: சந்திரபாபு நாயுடுவுக்கு சர்மிளா வேண்டுகோள்

Published On 2024-06-06 06:54 GMT   |   Update On 2024-06-06 06:54 GMT
  • சிறப்பு அந்தஸ்து வழங்குவதாக ஒப்புக்கொண்டால் மட்டுமே ஆதரவு அளிக்க வேண்டும்.
  • அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வேண்டும்.

திருப்பதி:

ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் சர்மிளா தனது எக்ஸ் பக்கத்தில் தேர்தலில் வெற்றி பெற்ற சந்திரபாபு நாயுடு மற்றும் பவன் கல்யாணுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியிருப்பதாவது:-

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதாக ஒப்புக்கொண்டால் மட்டுமே பா.ஜ.க ஆட்சி அமைக்க ஆதரவு அளிக்க வேண்டும்.

பிரிவினை மறு சீரமைப்பு சட்டம் 2014-ன் படி அளிக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் சந்திரபாபு நாயுடு ஆதரவு அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

Tags:    

Similar News