இந்தியா

பாழடைந்த கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து- 5 பேர் பலி

Published On 2022-10-30 22:01 IST   |   Update On 2022-10-30 22:01:00 IST
  • சம்பவம் குறித்து விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் பவ்னீத் கவுர் தெரிவித்தார்.
  • உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் நிவாரண நிதியில் இருந்து ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படுவதாக அறிவிப்பு.

மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியில் பாழடைந்த கட்டிடம் இடிந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் இருவர் காயமடைந்தனர். அமராவதியில் உள்ள பிரபாத் டாக்கீஸ் திரையரங்கம் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்பு படையினரும், போலீசாரும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் பவ்னீத் கவுர் தெரிவித்தார்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் நிவாரண நிதியில் இருந்து ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்குவதாக மராட்டிய முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார். இந்த சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள துணை முதல்வர், காயமடைந்தவர்களின் மருத்துவச் செலவை மாநில அரசு ஏற்கும் என்றும், விசாரணை நடத்த கோட்ட ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Tags:    

Similar News