இந்தியா

தோழியை கணவருக்கு விருந்தாக்கி வீடியோ எடுத்து நகை பறிப்பு- தம்பதி கைது

Published On 2024-07-27 06:08 GMT   |   Update On 2024-07-27 06:08 GMT
  • கல்லூரி மாணவி தனது தோழியான பிரணவ கிருஷ்ணா வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவது வழக்கம்.
  • மாணவி தன்னிடம் நகை, பணம் எதுவும் இல்லை என பதில் கூறினார்.

திருப்பதி:

ஆந்திர மாநிலம், கர்னூலை சேர்ந்தவர் 23 வயது இளம்பெண். இவர் திருப்பதியில் உள்ள விடுதியில் தங்கியிருந்து அங்குள்ள பல்கலைக்கழகத்தில் எல்.எல்.பி சட்டப்படிப்பு படித்து வருகிறார்.

அவருடன் படிக்கும் திருப்பதியை அடுத்த புடிபட்டிலை சேர்ந்த சக மாணவியான பிரணவ கிருஷ்ணா( 35) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. பிரணவ கிருஷ்ணாவின் கணவர் பாக்ரா பேட்டையை சேர்ந்த கிருஷ்ண கிஷோர் ரெட்டி எஸ்.வி.யூ பல்கலைக்கழகத்தில் எல்.எல்.பி இறுதி ஆண்டு படித்து வருகிறார்.

கணவன், மனைவி இருவருக்கும் கஞ்சா மற்றும் மது போதை பழக்கம் இருந்தது.

கல்லூரி மாணவி தனது தோழியான பிரணவ கிருஷ்ணா வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவது வழக்கம். அப்போது அவர்கள் கஞ்சா பழக்கத்தை உருவாக்கினர்.

கடந்த மாதம் தனது வீட்டிற்கு வந்த கல்லூரி மாணவிக்கு கஞ்சா பயன்படுத்த கொடுத்தனர். கஞ்சாவை புகைத்த மாணவி சிறிது நேரத்தில் மயக்கம் அடைந்தார். அப்போது கிருஷ்ண கிஷோர் மாணவியை பலாத்காரம் செய்தார்.

கணவர் தோழியை பலாத்காரம் செய்ததை பிரணவ கிருஷ்ணா தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார். இதையடுத்து தோழியிடம் வீடியோவை காட்டி நகை, பணம் பறித்தனர்.

ஒரு கட்டத்தில் மாணவியிடம் எந்த நகையும் இல்லாத நிலையில் பிரணவ கிருஷ்ணா நகை, பணத்தை கேட்டு மிரட்டினார். மாணவி தன்னிடம் நகை, பணம் எதுவும் இல்லை என பதில் கூறினார்.

இதனால் ஆத்திரம் அடைந்த பிரணவ கிருஷ்ணா மாணவியின் சகோதரர் மற்றும் அவரது வருங்கால கணவருக்கு ஆபாச வீடியோக்களை வாட்ஸ்அப்பில் அனுப்பி வைத்தார்.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுகுறித்து போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து பலாத்கார வீடியோவை காட்டி பணம் பறித்த கணவன், மனைவியை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

Tags:    

Similar News