இந்தியா (National)

மலப்புரத்தில் மேலும் 2 பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பு

Published On 2024-09-22 04:28 GMT   |   Update On 2024-09-22 04:28 GMT
  • 267 பேர் தொடர்பு பட்டியலில் இருந்த நிலையில் 177 பேர் முதன்மை தொடர்பு பட்டியலில் இருந்தனர்.
  • இவர்களில் 2 பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பு அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளது.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த 25 வயது வாலிபர் நிபா வைரஸ் பாதிப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பரிதாபமாக இறந்தார்.

இதனை தொடர்ந்து அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. 267 பேர் தொடர்பு பட்டியலில் இருந்த நிலையில் 177 பேர் முதன்மை தொடர்பு பட்டியலில் இருந்தனர்.

இவர்களிடம் 6 மாதரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இவர்களில் 32 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் 2 பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பு அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து 2 பேரும் மலப்புரம் மஞ்சேரியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களிடம் மேலும் சில மாதரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News