இந்தியா (National)

டீக்கடைகாரரை ஜன்னலில் கட்டிவைத்து கொடூரமாக தாக்கிய போலீஸ் - வீடியோ

Published On 2024-09-22 02:49 GMT   |   Update On 2024-09-22 02:49 GMT
  • காவல்நிலையத்தில் உள்ள ஒரு ஜன்னலில் ஒருவர் கட்டிவைக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
  • இந்த விவகாரம் தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் சுனில் சரேயம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

மத்தியப் பிரதேச மாநிலம் பெதுல் மாவட்டத்தில் உள்ள முல்டாய் காவல்நிலையத்தில் உள்ள ஒரு ஜன்னலில் ஒருவர் கட்டிவைக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட நபர் போலீஸ் எஸ்பியை சந்தித்து புகார் அளித்தார்.

அவரது புகாரில், "நான் மல்டெய்ல் பேருந்து நிலையத்தில் தேநீர் மற்றும் சிற்றுண்டிக் கடை நடத்தி வருகிறேன். சில ஆட்களுக்கு முன்பு எனது கடையில் போதைப்பொருள் விற்பனை செய்தேன் என்று குற்றம் சாட்டி போலீசார் என்னை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு ஜன்னலில் என்னை கட்டி வைத்து போலீசார் அடித்தனர்" என்று தெரிவித்தார்.

இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சுனில் சரேயம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள எஸ்பி, விசாரணை அறிக்கையின் அடிப்படையில் மேலும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News