இந்தியா

விமானத்தில் ரகளை செய்த பயணி இறக்கிவிடப்பட்டார்

Published On 2023-04-10 05:56 GMT   |   Update On 2023-04-10 05:56 GMT
  • விமானம் புறப்பட்டபோது அதில் இருந்து பயணி ஒருவர் ரகளையில் ஈடுபட்டார்.
  • விமான ஊழியர்கள் 2 பேரை தாக்கியதாக கூறப்படுகிறது.

புதுடெல்லி:

டெல்லியில் இருந்து லண்டனுக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. அதில் 225 பயணிகள் இருந்தனர். விமானம் புறப்பட்டபோது அதில் இருந்து பயணி ஒருவர் ரகளையில் ஈடுபட்டார். அவர் விமான ஊழியர்கள் 2 பேரை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து விமானம் உடனடியாக மீண்டும் டெல்லியில் தரையிறக்கப்பட்டது. விமானத்தில் ரகளை செய்த பயணி கீழே இறக்கிவிடப்பட்டார்.

பின்னர் மீதமுள்ள பயணிகளுடன் அந்த விமானம் லண்டன் புறப்பட்டு சென்றது.

Tags:    

Similar News