இந்தியா

நிலச்சரிவில் பாலம் அடித்துச் செல்லப்பட்டது: சுரேஷ் கோபி

Published On 2024-07-30 03:39 GMT   |   Update On 2024-07-30 04:08 GMT
  • பலர் நிலச்சரிவில் சிக்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
  • சம்பவ இடத்தில் மாவட்ட ஆட்சியர், பாதுகாப்புப் படை வீரர்கள் தொடர்ந்து பணிகளை செய்து வருகின்றனர்.

கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் வயநாட்டில் 3 இடங்களில் அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவு சிக்கி இதுவரை 12 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பலர் நிலச்சரிவில் சிக்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே, வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் அங்கிருந்த பாலம் அடித்துச் செல்லப்பட்டதால் மீட்புப் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி கூறியுள்ளார்.

மேலும் நிலச்சரிவு குறித்து பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் பேசவிருக்கிறேன். சம்பவ இடத்தில் மாவட்ட ஆட்சியர், பாதுகாப்புப் படை வீரர்கள் தொடர்ந்து பணிகளை செய்து வருகின்றனர் என கூறியுள்ளார்.

Tags:    

Similar News