இந்தியா (National)

திருமணத்திற்கு வற்புறுத்தியதால் கள்ளக்காதலியை கழுத்தை அறுத்துக் கொன்ற வாலிபர்

Published On 2023-05-17 09:58 GMT   |   Update On 2023-05-17 09:58 GMT
  • திருமணமாகி 2 குழந்தைகளுடன் வசித்து வந்த தேவிகா, சதீசுடன் பல இடங்களுக்கு சென்றுள்ளார்.
  • சம்பவத்தன்று கன்ஹாங்காடு பகுதியில் நடந்த கேரள மாநில முடிதிருத்தும் பியூட்டிசியன் தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட மாநாட்டுக்கு தேவிகா சென்றுள்ளார்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் கண்ணங்காடு அருகே உள்ள முள்ளியார் கிராம பஞ்சாயத்துக்குட்பட்ட போலிகாணம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (வயது 36). இவர் கண்ணங்காட்டில் தனியார் செக்யூரிட்டி ஏஜென்சி நடத்தி வருகிறார்.

சதீசுக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளனர். இவர் கடந்த 2 மாதங்களாக விடுதியில் வசித்து வந்தார். அப்போது உத்மா கிராம பஞ்சாயத்து மாங்காடு பகுதியைச் சேர்ந்த ஒப்பனை கலைஞர் தேவிகா (34) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது.

திருமணமாகி 2 குழந்தைகளுடன் வசித்து வந்த தேவிகா, சதீசுடன் பல இடங்களுக்கு சென்றுள்ளார். சம்பவத்தன்று கன்ஹாங்காடு பகுதியில் நடந்த கேரள மாநில முடிதிருத்தும் பியூட்டிசியன் தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட மாநாட்டுக்கு தேவிகா சென்றுள்ளார்.

அங்கு சென்ற சதீஷ், தேவிகாவை சந்தித்து பேசி உள்ளார். அதன்பிறகு அவரை விடுதிக்கு அழைத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று காலை விடுதி அறையில் வைத்து 2 பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அதன்பிறகு மதியம் சதீஷ் மட்டும் விடுதி அறையை பூட்டி விட்டு வெளியே சென்றார். அங்கிருந்து ஓஸ்துர்க் போலீஸ் நிலையம் சென்ற அவர், தேவிகாவை கழுத்தை அறுத்துக்கொலை செய்து விட்டதாக கூறி சரண் அடைந்தார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், விடுதி அறைக்குச் சென்று பார்த்தபோது, அங்கு தேவிகா கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்துள்ளார். உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதணைக்காக அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து காஞ்சங்கோடு போலீஸ் துணை சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் நாயர் சம்பவ இடம் வந்து சதீசிடம் விசாரணை நடத்தினார். அப்போது, விவாகரத்து பெற்று விட்டு தன்னுடன் வாழுமாறு கடந்த சில நாட்களாக தேவிகா வற்புறுத்தினார். இது எனக்கு பிடிக்கவில்லை. இது தொடர்பாக நேற்றும் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த நான் தேவிகாவின் கழுத்தை அறுத்து தற்கொலை செய்தேன் என போலீசாரிடம் சதீஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News