இந்தியா (National)

பட்டப்பகலில் வீட்டுக்குள் நுழைய முயன்ற திருடர்கள்.. ஒற்றை ஆளாக தடுத்து நிறுத்திய பெண்மணி - வீடியோ

Published On 2024-10-02 07:17 GMT   |   Update On 2024-10-02 07:17 GMT
  • வீட்டில் இருந்த பெண் அதை கவனித்து அவர்கள் உள்ளே வராதபடி கதவு அடைத்து நின்று போராடுகிறார்.
  • ஒற்றை ஆளாக திருடர்களை தடுத்து நிறுத்திய பெண்மணிக்கு இணையத்தில் பாராட்டுகள் குவித்து வருகிறது.

பஞ்சாபில் பட்டப்பகலில் வீட்டுக்குள் நுழைய முயன்ற மூன்று திருடர்களை பெண் ஒரே ஆளாக தடுத்து நிறுத்திய நெகிழ்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. வீட்டுக்குள் நுழைய முயன்ற திருடர்கள் உள்ளே வராமல் கதவைப் பிடித்துக்கொண்டு பெண் போராடும் சிசிடிவி வீடியோவை இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த வாரம் வியாழக்கிழமை பஞ்சாப் மாநிலம் அம்ரிஸ்தரில் உள்ள வெர்கா பகுதியில் பட்டப்பகலில் வீடு ஒன்றில் 3 கொள்ளையர்கள் நுழைய முயன்றுள்ளனர். உள்ளூர் நகை வியாபாரி ஒருவர் வீட்டில் இல்லாததை நோட்டம் விட்ட அந்த மூவர் வீட்டுக்குள் வர முயன்ற நிலையில் அவர்களை அந்த வீட்டில் இருந்த பெண் அதை கவனித்து அவர்கள் உள்ளே வராதபடி கதவு அடைத்து நின்று போராடுகிறார்.

இறுதியில் சோபாவை இழுத்து வழியை அடைத்ததாலும் பெண் கூச்சலிட்டதாலும் உள்ளே நுழையும் முயற்சியைக் கைவிட்டு திருடர்கள் வெறுங்கையுடன் திரும்பினர். இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரில் பேரின் போலீசார் திருடர்களை தேடி வருகிறனர். இதற்கிடையே ஒற்றை ஆளாக திருடர்களை தடுத்து நிறுத்திய பெண்மணிக்கு இணையத்தில் பாராட்டுகள் குவித்து வருகிறது.

Tags:    

Similar News