இந்தியா (National)

நிர்வாண படத்தை வெளியிடுவதாக கூறி மாணவியை 3 ஆண்டுகளாக மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த டியூசன் ஆசிரியர்

Published On 2024-09-24 06:28 GMT   |   Update On 2024-09-24 06:29 GMT
  • கடந்த மூன்று ஆண்டுகளாக நிர்வாண படத்தை வெளியிட்டு விடுவதாக மிரட்டி பாலியல பலாத்காரம்.
  • மனஅழுத்தம் அடைந்த நிலையில் தோழியிடம் சம்பவத்தை கூற, வழக்குப்பதிவு செய்து டியூசன் மைய உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள வெள்ளாஞ்சிரா பகுதியை சேர்ந்தவர் சரத் (வயது 28). இவர் அந்த பகுதியில் 3 டியூசன் மையங்கள் நடத்தி வருகிறார். அதில் ஒரு மையத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பிளஸ்-1 மாணவி ஒருவர் கணித பாடத்திற்கு டியூசனுக்கு சேர்ந்தார்.

அப்போது அந்த மாணவியை, அவருக்கு தெரியாமல் டியூசன் சென்டர் உரிமையாளரான ஆசிரியர் சரத் நிர்வாண வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்திருக்கிறார். அதனை காண்பித்து மிரட்டி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். அத்துடன் அந்த மாணவியின் சமூக வலைத்தள பக்கத்தை கையாணடு வந்துள்ளார்.

அந்த மாணவி தற்போது பி.டெக். படிக்கும் நிலையில், சரத்தின் டியூசன் சென்டரில் தொடர்ந்து படிக்கிறார். தன்னிடம் உள்ள நிர்வாண படங்களை காண்பித்து மிரட்டியபடி கடந்த 3 ஆண்டுகளாக மாணவியை ஆசிரியர் சரத் பாலியல் பலாத்காரம் செய்தபடி இருந்திருக்கிறார்.

டியூசன் ஆசிரியர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்துவந்த தகவலை, அந்த மாணவி தனது தோழி ஒருவரிடம் தெரிவித்தார். தோழியின் அறிவுறுத்தலின் பேரில் டியூசன் ஆசிரியர் சரத் மீது பாதிக்கப்பட்ட மாணவி, ஆளூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பிறகே டியூசன் ஆசிரியரால் மாணவி பாலியல் தொல்லைக்கு உள்ளாகிய தகவல் வெளிச்சத்துக்கு வந்தது. மாணவி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து டியூசன் ஆசிரியர் சரத்தை போலீசார் கைது செய்தனர்.

மாணவியின் ஆபாச படங்கள் உள்ளதா? என்று ஆசிரியரின் செல்போன் உள்ளிட்டவைகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். ஆசிரியர் சரத் இது போன்று வேறு மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்தாரா? என்று போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News