இந்தியா (National)

புலிகள் காப்பகத்தில் குட்டிகளை கொன்ற சிறுத்தைகள்

Published On 2024-06-25 09:07 GMT   |   Update On 2024-06-25 09:07 GMT
  • 4 புலிக்குட்டிகளில் 2 குட்டிகள் ராஜாஜி புலிகள் காப்பகத்தில் உள்ள சிறுத்தைகளால் கொல்லப்பட்டுள்ளது.
  • சில்லாவலி மலைத்தொடரில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்ட புலிகளுக்கு கடந்த மே மாதம் 24-ந்தேதி 4 குட்டிகள் பிறந்தது.

உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள ராஜாஜி புலிகள் காப்பகத்தில் 2 புலிக்குட்டிகளை சிறுத்தைகள் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், கார்பெட் புலிகள் காப்பகத்தில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்ட 4 புலிக்குட்டிகளில் 2 குட்டிகள் ராஜாஜி புலிகள் காப்பகத்தில் உள்ள சிறுத்தைகளால் கொல்லப்பட்டுள்ளது.

2 குட்டிகளில் ஒரு ஆண் புலி குட்டி என்றும் மற்றொன்று பெண் புலி குட்டி என்றும் ராஜாஜி புலிகள் காப்பக அதிகாரி சங்கீத் படோலா கூறினார். குட்டிகள் இரண்டும் 1 முதல் 1 1/2 மாத குட்டிகள் என்று அவர் தெரிவித்தார்.

சில்லாவலி மலைத்தொடரில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்ட புலிகளுக்கு கடந்த மே மாதம் 24-ந்தேதி 4 குட்டிகள் பிறந்தது. தற்போது 2 குட்டிகள் மட்டுமே உயிருடன் உள்ளன.

Tags:    

Similar News