இந்தியா

வயநாடு நிலச்சரிவு: வி.ஐ.டி. பல்கலைக்கழகம் சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி

Published On 2024-08-06 13:59 GMT   |   Update On 2024-08-06 13:59 GMT
  • வயநாடு நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 400-ஐ நெருங்கியுள்ளது.
  • ராணுவ மீட்புப் பணிகளில் மிகவும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்து வருகிறார்கள்.

திருவனந்தபுரம்:

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு கேரள மாநில மக்கள் மட்டுமின்றி, நாடு முழுவதும் உள்ள அனைவரையும் கவலையடைய செய்திருக்கிறது. அங்கு மீட்பு பணி இன்று 8-வது நாளாக தொடர்ந்து வருகிறது.

பலி எண்ணிக்கை 400-ஐ நெருங்கியயுள்ளது. மேலும், 200-க்கும் மேற்பட்டவர்கள் மாயமாகியிருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்கள் உள்ளிட்ட மீட்புக்குழுவினர் மிகவும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்து வருகிறார்கள்.

இதற்கிடையே நிலச்சரிவில் பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்தினருக்கு உதவும் வகையில் பல்வேறு அரசியல் கட்சிகள், திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலர் நிதியுதவி அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிடும் வகையில் கேரள மாநில முதல் மந்திரி பினராயி விஜயனைச் சந்தித்து வி.ஐ.டி. பல்கலைக்கழகம் சார்பில் வேந்தர் ஜி.விசுவநாதன் ரூ.1 கோடிக்கான வரைவோலை வழங்கினார்.

அப்போது வி.ஐ.டி. துணைத்தலைவர் சங்கர் விசுவநாதன், டாக்டர்.ஜி.வி.செல்வம், உதவி துணைத்தலைவர் காதம்பரி ச.விசுவநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News