இந்தியா

'குழந்தை ஆபாசப் படங்களைப் பார்ப்பது குற்றமாகாது'.. சர்ச்சைத் தீர்ப்பை திரும்பப்பெற்ற உயர்நீதிமன்றம்

Published On 2024-07-21 03:08 GMT   |   Update On 2024-07-21 03:08 GMT
  • தகவல் தொழிநுட்பச் சட்டம் [2000] பிரிவு 67B இன்கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது
  • குழந்தைகளின் ஆபாசப் படத்தைப் பார்ப்பது சட்டப்படி குற்றமாகாது என்று தீர்ப்பளித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இணையதளத்தில் குழைந்தைகளின் ஆபாச படங்களைப் பார்த்ததாக கடந்த 2022 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தகவல் தொழிநுட்பச் சட்டம் [2000] பிரிவு 67B இன்கீழ் [குழந்தைகளுக்கு எதிரானவற்றை உருவாக்குதல், பரப்புதல்] அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் கடந்த ஜூலை 18 ஆம் தேதி இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி நாகப்பிரசன்னா, குழந்தைகளின் ஆபாசப் படத்தைப் பார்ப்பது சட்டப்படி குற்றமாகாது என்று தீர்ப்பளித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தற்போது அந்த தீர்ப்பை கர்நாடக உய்ரநீதிமன்றம் திரும்பப்பெற்றுள்ளது. முந்தைய தீர்ப்பு குறித்து விளக்கமளிதுள்ள நீதிமன்றம், 'இங்கிருப்பவர்களும் மனிதர்கள்தான், எங்கள் தரப்பிலும் தவறுகள் நடப்பது சகஜம் தான். தவறைத் திருத்திக்கொள்ள எப்போதும் சந்தர்ப்பம் உள்ளது. தவறாக வாசிக்கப்பட்ட இந்த வழக்கின் தீர்ப்பை திரும்பப்பெறுவதோடு, வழக்கில் புதிய தீர்ப்பு வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. 

Tags:    

Similar News