இந்தியா

பாஜக மாநிலம் தழுவிய போராட்டம்: மம்தா ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தல்

Published On 2024-08-16 11:45 GMT   |   Update On 2024-08-16 11:45 GMT
  • பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் ஜனநாயகம் தோல்வியடைந்ததைவிட மேற்குவங்கத்தில் மிகவும் மோசமாக இருக்கிறது.
  • பிரச்சனையை தீர்ப்பதில் அரசு நிர்வாகம் தோல்வியடைந்தது.

மேற்குவங்க மாநிலத்தின் கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவமனை கல்லூரி மற்றும் மருத்துவமனை பயிற்சி டாக்டர் கொடூரமாக கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி டாக்டர்கள் போராட்டம் நடத்தினர். மாணவர்கள் திடீரென வன்முறையில் இறங்கி மருத்துவமனையை அடித்து நொறுக்கினர்.

இந்த நிலையில் மேற்குவங்க மாநில முதல்வராக இருக்கும் மம்தா பானர்ஜி தனது பதவியை ராஜினமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி பாஜக மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது மம்தா பானர்ஜி முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இது தொடர்பான வாசகம் எழுதிய பதாதைகளை கையில் ஏந்தி சென்றனர். மேலும் திரிணாமுல் காங்கிரஸ் அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். அத்துடன் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் ஜனநாயகம் தோல்வியடைந்ததைவிட மேற்குவங்கத்தில் மிகவும் மோசமாக இருக்கிறது. இந்த பிரச்சனையை தீர்ப்பதில் அரசு நிர்வாகம் தோல்வியடைந்தது என குற்றம்சாட்டினர்.

பாஜக-வினர் கொல்கத்தாவின் ஷியாம்பஜார் ஐந்து முனை சாலையில் பேரணி நடத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால் போலீசார் அதை முறியடித்தனர். பேரணிக்காக அமைக்கப்பட்டிருந்த மேடை அகற்றப்பட்டது. இந்த செயல் பொதுமக்களின் எதிர்ப்பை முடக்கும் முயற்சி என பாஜக தெரிவித்தது. பல இடங்களில் பாஜக-வினர் கைது செய்யப்பட்டனர்.

எம்எல்ஏ அக்னிமித்ரா பால், ருத்ரானில் கோஷ் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் இந்த போராட்ட பேரணியில் கலந்த கொள்ள அங்கு திரண்டனர்.

"இந்த எதேச்சதிகார அரசு போக வேண்டும். அம்மாநில மக்கள் மம்தா பானர்ஜி அரசை அகற்றுவார்கள்" என அக்னிமித்ரா பால் தெரிவித்தார். பாஜக மாநில தலைவரான சுகந்தா மஜும்தார் அந்த இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும் தீப பேரணியும் நடத்த உள்ளனர்.

Tags:    

Similar News