இந்தியா (National)

ஆந்திராவில் YSR காங்கிரஸ் கட்சி நிர்வாகி வெட்டிக்கொலை

Published On 2024-07-18 05:31 GMT   |   Update On 2024-07-18 06:34 GMT
  • இரவு மதுபான கடையில் வேலை முடிந்து ஷேக் ரஷீத் வீட்டுக்கு புறப்பட தயாரானார்.
  • ஷேக் ரஷீத்தை மீட்டு அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

திருப்பதி:

ஆந்திர மாநிலம், பல் நாடு மாவட்டம், விணு கொண்டாவை சேர்ந்தவர் ஷேக் ரஷீத் (வயது 25). ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி இளைஞரணி நிர்வாகி.

இவர் முண்டலா முரு பஸ் நிலையம் அருகே உள்ள அரசு மதுபான கடையில் சூப்பர்வைசராக வேலை செய்து வந்தார்.

கடந்த தேர்தலுக்கு முன்பு இவருடைய நண்பர் ஷேக் ஜிலானி என்பவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தேர்தலின் போது ஷேக் ரஷீத், ஷேக் ஜிலானி வீட்டிற்கு சென்று வீட்டின் முன்பாக நிறுத்தி வைத்திருந்த அவரது பைக்கை தீ வைத்து எரித்தார்.

இதனால் ஷேக் ரஷீத் மீது ஜிலானிக்கு கடும் ஆத்திரம் உண்டானது.

நேற்று இரவு மதுபான கடையில் வேலை முடிந்து ஷேக் ரஷீத் வீட்டுக்கு புறப்பட தயாரானார்.

அங்கு வந்த ஷேக் ஜிலானி தான் வைத்திருந்த கத்தியால் ரஷீத்தை சரமாரியாக வெட்டினார். இதில் அவரது கை துண்டாகி விழுந்தது. ரஷீத் ரத்த வெள்ளத்தில் வலியால் அலறி துடித்தார்.

அங்கிருந்த பொதுமக்கள் வேடிக்கை மட்டும் பார்த்தனர். ஒருவரும் கொலையை தடுக்க முன்வரவில்லை. இதையடுத்து ஜிலானி அங்கிருந்து தப்பி சென்றார்.

அருகில் இருந்தவர்கள் ஷேக் ரஷீத்தை மீட்டு அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர் ரஷீத் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

போலீசார் வழக்கு பதிவு செய்து ஷேக் ஜிலானியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஷேக் ரஷீத் வெட்டி கொல்லப்பட்ட வீடியோ காட்சி வைரலாகி வருகிறது. இது பார்ப்பவர்களை பதற வைக்கும் வகையில் உள்ளது.

Tags:    

Similar News