புதுச்சேரி

கன்னிகா பரமேஸ்வரி அம்மனுக்கு 16 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்காரம்

Published On 2024-08-24 08:26 GMT   |   Update On 2024-08-24 08:26 GMT
  • அம்மன் கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து வழிபடுவது வழக்கம்.
  • கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டன.

புதுச்சேரி:

தமிழ்நாட்டில் அம்மன் கோவில்களில் ஆடி மாதம் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும்.

இதே போல் ஆந்திராவில் அங்குள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும். தெலுங்கு நாட்காட்டிபடி சிரவண மாதம் ஆகஸ்டு 3-ந் தேதி தொடங்கி, செப்டம்பர் 3-ந் தேதி முடிகிறது. இந்த நாட்களில் அங்குள்ள அம்மன் கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து வழிபடுவது வழக்கம்.

ஆந்திரா மாநிலம் காக்கிநாடாவை ஒட்டியுள்ள புதுவையின் ஏனாம் பிராந்தியத்தில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டன. இதில் ரூபாய் நோட்டுக்களால் மாலை செய்து அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

500 ரூபாய், 200 ரூபாய், 100 ரூபாய், 50 ரூபாய்,20 ரூபாய், 10 ரூபாய் ஆகியவற்றைக் கொண்டு ரூ.16 லட்சம் மதிப்பிலான நோட்டுக்களால் அம்மனுக்கு மாலையும், அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது.

12 ஆண்டுகளாக இதே பகுதியை சேர்ந்த வனக்கால நரேந்திரா என்ற பக்தர் அம்மனுக்கு ஆண்டுதோறும் ரூபாய் நோட்டுக்களால் அலங்காரம் செய்து கடைசி நாளில் பக்தர்களுக்கு அந்த நோட்டுகளை பிரசாதமாக வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News