புதுச்சேரி

சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபருக்கு 20 ஆண்டு ஜெயில்... புதுச்சேரி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு

Published On 2024-09-07 08:03 GMT   |   Update On 2024-09-07 08:03 GMT
  • ரீகன் மீது சிறுமியின் தரப்பில் தவளக்குப்பம் போலீஸ் நிலையத்தில் கடந்த 2022-ம் ஆண்டு புகார் அளித்தனர்.
  • சிறுமியின் குடும்பத்துக்கு நிவாரணமாக ரூ.4 லட்சம் வழங்கவும் அரசுக்கு பரிந்துரைத்தார்.

புதுச்சேரி:

புதுச்சேரி தவளகுப்பம் அருகே தமிழகப் பகுதியான கடலூர் நல்லவாடு பகுதியைச் சேர்ந்தவர் ரீகன் என்ற சையது (வயது 30).

இவர் புதுச்சேரியில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலைபார்த்து வந்தார். இதற்கிடையே இவருக்கு தவளக்குப்பம் பகுதியைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது. சிறுமியைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி நெருங்கி பழகினார். அதனால் சிறுமி கர்ப்பமடைந்தார்.

இதன் பிறகு சிறுமியை திருமணம் செய்ய மறுத்துள்ளார். அதையடுத்து ரீகன் மீது சிறுமியின் தரப்பில் தவளக்குப்பம் போலீஸ் நிலையத்தில் கடந்த 2022-ம் ஆண்டு புகார் அளித்தனர். அதன்படி போக்சோ சட்டத்தில் ரீகன் கைது செய்யப்பட்டார்.

அவர் மீதான வழக்கு விசாரணை புதுச்சேரி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. அரசுத் தரப்பில் வக்கீல் பச்சையப்பன் ஆஜரானார்.

வழக்கு விசாரணை முடிந்த நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட ரீகனுக்கு போக்சோ சட்டப்பிரிவு 6ன் கீழ் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சுமதி தீர்ப்பளித்தார்.

மேலும் சிறுமியின் குடும்பத்துக்கு நிவாரணமாக ரூ.4 லட்சம் வழங்கவும் அரசுக்கு பரிந்துரைத்தார்.

Tags:    

Similar News