சிறப்புக் கட்டுரைகள்

கல்லீரல் கொழுப்பு பிரச்சனை: உடல் நலனுக்கான யோசனைகள்!

Published On 2024-10-07 09:33 GMT   |   Update On 2024-10-07 09:33 GMT
  • திடீரென எடை அதி கரிப்பது, பெருத்த வயிறு இருப்பது.
  • தொடர்ந்து சோர்வாக இருப்பது, பலவீனமாக இருப்பது.

இப்போது எங்கும் பரவி வரும் பாதிப்பு சுவாசக் குழாய் தொற்று. 'ப்ளூ' பாதிப்பு போன்றவைதான். பாதிப்பு அடைந்தவர்கள் அருகில் நீங்கள் இருந்தால் போதும். தும்மல், சளி, ஜூரம் என உங்களுக்கும் வந்து விடும்.

சிலருக்கு எளிதில் சரி ஆகி விடும். சிலரை மருத்துவமனையில் படுக்க வைத்து விடும்.


ப்ளூ பாதிப்பிற்கு உங்கள் குடும்ப மருத்துவரின் ஆலோசனையின் பெயரில் மருந்து, நிறைய திரவ உணவு, நல்ல ஓய்வு எடுத்துக் கொண்டால் நல்ல பலனை அடையலாம்.

* ஜுரம் * உடல் சில்லிப்பு * மூக்கில் நீர் வடிதல் * மூக்கடைப்பு * அதிக சோர்வு * மூச்சு வாங்குதல் போன்ற அறிகுறிகள் இருக்கும். பின் தலைவலி, தொண்டை பாதிப்பு, வறட்டு இருமல் இருக்கும்.

* கண் சிவந்து நீர் வடிதலும் இருக்கலாம். சாதாரண ஜலதோஷத் திற்கும் ப்ளூ பாதிப்பிற்கும் சிறிய வித்தி யாசம் இருக்கும்.

* ப்ளூ ஜுரம் 3 அல்லது 4 நாட்கள் வரை கூட நீடிக்கும்.

* ப்ளூ பாதிப்பில் உடல் வலி மிகக் கடுமையாக இருக்கும்.

* உடல் சில்லிப்பு, குளிர் போன்றவை ப்ளூ ஜுரத்தில் அதிகமாக இருக்கும்.

* தும்மல் ஜலதோஷத்தில் அதிகமாக இருக்கும்.

* இருமல், நெஞ்சில் அசவுகரியம் போன்றவை ப்ளூ பாதிப்பில் அதிகமாக இருக்கும்.

* தலைவலி ப்ளூ பாதிப்பில் 'மண்டையில் இடி' என்பது போல் இருக்கும்.

* ப்ளூ பாதிப்பில் பாதிப்படைந்தது வெளியில் தெரிவதற்கு முன்பாகவே உங்களை சுற்றி உள்ளவர்கள் பாதிப்பு அடைகின்றனர்.

* திடீரென உடலில் அதிக அசதி ஏற்படும்.

* மூன்றாவது நாள் மேற்கூறிய பாதிப்புகள் மிக அதிகமாக இருக்கும்.

* பசி இல்லாத உணர்வு இருக்கும்.

* பாதிப்பின் போது அதிக ஓய்வு எடுப்பது அவசியம்.


* அதிக திரவ உணவு, தண்ணீர், கிரீன் டீ, கஞ்சி, சூப், எலோக்ட்ர லைட்ஸ், வெது வெதுப பான நீர் இவற்றினை குடிக்கலாம்.

* சோடா, ஜூஸ், காபி இவற்றினை தவிர்த்து விட வேண்டும்.

* உடலுக்கு வெது வெதுப்பான ஒத்தடம் கொடுக்கலாம்.

* தனித்து இருப்பது நல்லது.

* மருத்துவர் ஆலோ சனையின் பெயரில் மருந்து எடுத்துக் கொள்ளுங்கள்.

* 5 அல்லது 7 நாட்கள் வரை இந்த பாதிப்பு இருக்கலாம்.

* ஐந்து வயதுக்கு கீழ் இருப்பவர்களும், 65 வயதிற்கு மேல் இருப்பவர்களும் கூடுதல் கவனம் பெற வேண்டும்.

* நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களை எளிதில் தாக்கும்.

* கர்ப்ப காலத்தில் பாதுகாப்பு அவசியம்.

* சர்க்கரை நோய் * ஆஸ்துமா * இருதய நோய் * கல்லீரல் பாதிப்பு * சிறுநீரக பாதிப்பு உடையவர்கள் பாதிப்பினை அதிகம் அடைவர்.

இந்த நோய்களின் உறவுக்காரர்கள் போல் * நிமோனியா, * சைனஸ் * காது கிருமி பாதிப்பு

* நுரையீரல் பாதிப்பு * இருதய வீக்கம் * உறுப்புகள் பாதிப்பு என எழுத தவிர்க்கும் சில அச்சுறுத்தும் பாதிப்புகளும் ஏற்படலாம்.

* மூச்சு விடுவதில் சிரமம் * வயிறு, நெஞ்சில் ஒரு அழுத்தம் * மயக்கம் *சிறுநீர் வெளி செல்லுதல் குறைவு * வாந்தி இருந்தாலோ, ஜூரம் திரும்ப வருவது போன்ற சில புதிய அறிகுறிகள் இருந்தாலோ தாமதமின்றி மருத்துவர் ஆலோசனை பெறுவதே அவசியம்.

* ப்ளூ தவிர்ப்பு ஊசியினை யும் வருடத்திற்கு ஒருமுறை மருத்துவர் ஆலோசனையோடு எடுத்துக் கொள்வது நல்லது.

மனித மூளைக்கும், உட லுக்கும், மனதிற்கும் பொழுது போக்குகள் அவசியம் என்று நினைக்கின்றோம். மருத்துவர்களும் அறிவுறுத்து கின்றனர். பொதுவாக பொழுது போக்கு என்பது வயதிற்கேற்ப மாறுபடும்.

* விளையாட்டு

* புகைப்படம் எடுத்தல்

* புத்தகம் படித்தல் என பல பிரிவுகளில் இருக்கும். சமுதாயத்தோடு இணைந்த சில பொழுது போக்குகள் உள்ளன.

* கூட்டு விளையாட்டு

* கூட்டு நடனம்

* கூட்டு உடற்பயிற்சி போன்றவை இதனுள் அடங்கும். ஆனால் உங்களுக்குத் தெரியுமா?

* அன்றாடம் சமைக்கும் அம்மாவிற்கு அது பெரிய வேலை, சுமை. ஆனால் அவ்வப்போதாவது வீட்டில் உள்ள வர்கள் சமைத்தால் அது பொழுதுபோக்கு.

* கிராம பகுதிகளில் இருப்பவர்கள் பறவைகளை பார்ப்பது, அதன் சத்தத்தினை ரசிப்பது பொழுதுபோக்கு.

* இரவில் சிறிது நேரம் நட்சத்திரங்களை பார்த்து ரசிக்கலாம்.

* சைக்கிளில் வெளியில் செல்லலாம்.

* புது மொழி கற்கலாம்

* தனி மனித உரிமை போன்ற சட்டங்களைப் படிக்கலாம்.

* மீன் நீந்துவதனை பார்க்கும் போது மனம் அமைதிப்படும் என்பர்.


கல்லீரல் பாதிப்பு, கல்லீரல் கொழுப்பு அறிகுறிகள்

* திடீரென எடை அதி கரிப்பது, பெருத்த வயிறு இருப்பது.

* தொடர்ந்து சோர்வாக இருப்பது, பலவீன மாக இருப்பது

* வயிற்று வலி குறிப்பாக வலது பக்க விலாவின் கீழ் இருப்பது

* அடர் நிறம் கொண்ட சிறுநீர், வெளிர் நிற கழிவு வெளியேற்றம்

* அதிக சர்க்கரை அளவு (ரத்தத்தில்)

* ரத்த பரிசோதனையில் அதிக கொழுப்பு

* சிறிய அடிபட்டால் கூட கருத்து விடுதல்

* கண்களில் மஞ்சள்

இவையெல்லாம் கல்லீரல் பிரச்சினையின் அறிகுறிகள் என்று அறிவோம்.


* நவீன உலகில் அதிகம் நம்மை அறியாமல் மூழ்கினால் நமது உணவுப் பழக்கத்தில் ஆரோக்கியம் இன்மை ஏற்படும்.

* நினைத்த நேரத்தில் கண்ட உணவு உண்பதை நீங்கள் நாகரீக வாழ்க்கை என்ற பெயரில் நோய்களுக்குள் சிக்கிக் கொண்டீர்கள் என்று கொள்ளலாம்.

* எதற்கெடுத்தா லும் யாரையும் கேட்காமல் மருந்து களை தன் மனம் போனபடி எடுத்துக் கொள்வது நாகரீகமாகாது.

* நான் சற்று கடை தெரு சுற்றி வந்தால் மனம் மகிழ்ச்சி அடையும் என்று நினைப்பது நாகரீகமா?

* அதிக நேரம் டி.வி., போன் இவற்றில் மூழ்குபவர்கள். இவர்கள் நவீனம் என்ற பெயரில் உடல் நோய், மன நோய் இவற்றில் பாதிப்பினை பெறு கின்றார்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

இதிலிருந்து ஒவ்வொருவரும் உறுதி எடுத்து வெளிவருவது மிக அவசியம்.

வெறும் மருந்து, மாத்திரை என்றில்லாமல் உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு, தியானம் போன்ற பழக்கங்கள் முக்கியம். இந்த பழக்கங்கள் இல்லாமல் உடல் நலத்தினை பேணுவது கடினமே.

Tags:    

Similar News