சிறப்புக் கட்டுரைகள்

நமது ஆசைகள்!

Published On 2024-09-02 09:32 GMT   |   Update On 2024-09-02 09:32 GMT
  • ஒரு நிகழ்வினை சமாளிக்க அதிக டிராமா தேவையில்லை.
  • நீங்கள் உருவாக்கும் குடும்பம் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது.

மன அமைதி, தெளிவு, நிம்மதி இவற்றிற்கு அன்றாட வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை அல்லது சில முயற்சிகளை நாம் கடைபிடிக்க வேண்டும். இதனை 50 வயதில் கடைபிடிப்பது ரொம்ப லேட். எனவே 20 வயதிற்குள் அதை கடைபிடிக்க இளைய தலைமுறைக்கு சொல்லித் தரலாமே.

* பல நேரங்களில் பேசாமல் அமைதி காப்பது நல்லது. நன்கு பேசும் கிளியினைத்தான் கூண்டில் அடைக்கின்றார்கள். மறவாதீர்கள்.

* ஒரு நிகழ்வினை சமாளிக்க அதிக டிராமா தேவையில்லை. அமைதி போதும்.

* அநேக மக்களுக்கு வாழ்வின் நோக்கம், வாழ்வின் பாதையினை நிர்ணயிக்க முடிவதில்லை. தெரிவதில்லை.

* நீங்கள் வந்த குடும்பம் பெரிய முக்கியம் அல்ல. நீங்கள் உருவாக்கும் குடும்பம் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது.

* குடும்பம்தான் உங்களை ஊக்கப்படுத்தும், உறுதுணையாய் நிற்கும்.

* உங்கள் வெற்றியில் மகிழும் ஒரு நண்பர் இருந்தாலும் போதும். நீங்கள் அதிர்ஷ்டசாலிதான்.

மேலும் இந்த வழக்கங்களும் நடைமுறையும் உதவும்

* பிறரைப் பற்றி குறை கூறாது இருப்பதும், புறளி பேசாது இருப்பதும் மிகுந்த மன அமைதி தரும்.

* நீங்கள் பேசுவதை நீங்களே பதிவு செய்து பின்னர் நீங்களே அதனை கேட்டுப் பாருங்கள். உங்களை அழகாய் செதுக்கிக் கொள்ள இந்த பழக்கம் உதவும்.

* எங்கெங்கு தவறுகள் ஏற்படுகின்றன என்பதனை உணர உங்களுக்கு முழு உண்மையான உள்வட்ட நபர்கள் தேவை.

* யாரையும் பிறர் எதிரில் அவர்களது தவறுகளைக் கூறாமல் தனியே கூறிப்பாருங்கள்.

* மற்றவர்கள் பெயர்களை ஞாபகத்தில் வைத்து பேசுவது ஒரு தனி கலை.

* ஏதேனும் ஒன்று உங்களுக்குத் தெரியாது என்றால் 'தெரியாது' என்று சொல்லி விடுவது நிம்மதி தரும். நமக்கு சாதாரண ஆசைகள் இப்படியும் இருக்கலாமே?

* ராமாயணம், மகாபாரதம், பைபிள், குரான் இவை அனைத்தையும் சிறு வயதிலேயே படித்து அறியலாமே?

* தேர்ந்தெடுத்து சில புத்தகங்களை வாழ்நாளில் படித்து அறிந்து கொள்வோமே.

* சூரிய அஸ்தமனம் செவ்வாயில் நீலமாகத் தெரியுமாம். அழகாய் இருக்கும். சென்று பார்த்து வரலாமா.

* பிரபஞ்சம் நிசப்தமாக இருக்குமாம். நாமும் நிசப்தமாக இருந்து பிரபஞ்ச சக்தியாக மாற முயற்சிப்போமா.

* அகத்திய மகரிஷியினைப் பார்த்து இன்றும் ஏதோதோ வைரஸ் வகைகளை சொல்கின் றார்களே. அதற்கெல்லாம் அவருக்குத் தெரியாத மருந்தா? கேட்டு வர முடியுமா?

* இங்கிருந்து விடாது நடந்தால் 9 அல்லது 12 வருடத்தில் நிலவுக்கு சென்று விடலாம் என்கின்றனர். என்ன பிரமாதம். போக 9 வருடம், திரும்பி வர 9 வருடம். மொத்தம் 18 வருடம் தானே கண் சிமிட்டும் நேரத்தில் சென்று வந்து விடலாமே. செய்யலாமா?

* கருந்துளை, கருந்துளை என்கின்றார்களே. விண்வெளியில் நிலவும் கருந்துளை ஆற்றல் மிக்க ஈர்ப்பு விசை கொண்டது. ஒளி உட்பட எதுவும் அதன் ஈர்ப்பு விசையில் இருந்து தப்பிக்க முடியாது என்கின்றனர். எண்ணற்ற கருந்துளை உள்ளனவாம். மெதுவாக உள்ளே விழுந்து விடாமல் உள்ளே எட்டி பார்த்து விட்டு வருவோமா.

* என்னிடம் ஒரு பெண்மணி கூறியது. எனக்கும் ஒரே ஒரு சின்ன ஆசைதான். கடவுளைப் பார்த்து கேட்கணும். 'கடவுளே. எனக்கு ஒரு சின்ன ஆசை. உன்னிடம் எல்லா சக்தியும் இருந்தும் ஏன் இவ்வளவு அசடா இருக்கே. உன் சக்தியை என் கிட்ட கொஞ்ச நேரம் மட்டும் கொடு. கெட்டவனை எல்லாம் தீர்த்து கட்டி விட்டு உன்னிடமே உன் சக்தியினை திரும்ப கொடுத்து விடுகின்றேன்" என்றார். இதுவும் மிகச் சிறிய ஆசை தானே.

* சித்தர்களாலும், யோகிகளாலும் தூசியினைக் கூட ஒரு பொருளாக, சக்தியுள்ளதாக மாற்ற முடிகின்றதே. நமக்கு அந்த அளவு வேண்டாம். செய்யும் வேலை, படிக்கும் படிப்பு இவற்றில் முழு கவனம் செலுத்தி சாதிக்க விழிப்புணர்வும், கவனமும் வேண்டுமே.

* உங்களுக்கென என்ன வேண்டும்? ஒரு நல்ல தோட்டமும், நூலகமும் இருந்து விட்டால் போதும். அநேக நன்மைகள் கிடைத்ததற்கு இவை சமம்.

ஜென் புத்திசம்

இது புத்தர் வழி பின்பற்றுபவர்களின் ஒரு பிரிவு எனலாம். ஜென் என்றால் ஜப்பானிய மொழியில் தியானம் என்று பொருள். தியானத்தின் மூலம் உள்ளுணர்வு மற்றும் ஞானத்தினை அடையும் மார்க்கமாக இதனைக் கூறுவர்.

இவ்வழி பின்பற்றும் சில துறவிகள், ஞானிகளின் கருத்தினை கேட்கும், படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவைகளை பகிர்ந்து கொள்கிறேன்.

மார்க்கம் எதுவானாலும் மனிதனின் நோக்கம் ஒன்றுதான். தீயவை அகல வேண்டும். நல்லவை வந்து சேர வேண்டும். நல்லது என்று ஒன்று இருக்கும். அந்த தீயதனை நாம் நீக்கிக் கொண்டுதான் இருக்க வேண்டும்.

அப்போதுதான் நன்மை தடங்கல் இன்றி வந்து சேரும் என்ற விதமாக இவர்கள் பல கருத்துக்களைக் கூறியுள்ளனர். அவர்களின் பல கருத்துக்கள், பழக்க வழக்க முறைகள் நம் பழக்க வழக்கங்களை ஒத்து உள்ளன.


உதாரணமாக

உப்பு: இங்கு உப்பு என்று குறிப்பிடப்படுவது கல் உப்பை பற்றித்தான். நம்ம ஊரில் சாதாரண சமையல் முதல் பதப்படுத்தும் ஊறுகாய் வரை உப்பு அதிக முக்கியத்துவம் பெறுகின்றது. சிறிய அளவில்தான் என்றாலும் இது இல்லாமல் சமையல் இல்லை.

அதிக உப்பு கூடாது எனும் மருத்துவ உலகம் உடலில் உப்பின் அளவு குறைந்தால் ஏற்படும் தீமைகளையும் விளக்குகின்றது. நரம்பு மண்டலம், தசைகளின் இயக்கம், உடலின் திரவ சமநிலை இவற்றிற்கு உப்பு அவசியமான ஒன்றே.

உப்பின் அளவு உடலில் குறையும் போது வாந்தி, மயக்கம், சக்தியின்மை என கொண்டு சென்று விடும். இது ஆரோக்கிய, மருத்துவ முறை.

வீட்டில் ஏதேனும் புனித நீராடல் என்றால் கடலில் சென்று குளித்து வருவார்கள். அனைத்து தீய சக்திகளை நீக்கும் ஆற்றல் உப்பிற்கு உண்டு. வீட்டில் கண் திருஷ்டி எனச் சொல்ல உப்பு சுற்றி போடுவார்கள். இதனை நம்புபவரும், நம்பாதவரும் உண்டு. இது அவரவர் விருப்பம்.

மேலே குறிப்பிட்ட ஜென் முறையில் உப்பிற்கு நமக்கு ஆக்கப் பூர்வமான சக்தியிைன ஊட்டி வாழ்வினை வளமாக்கும் சக்தி உண்டு என்கின்றனர். இதனை எந்த மதசார்பும் இன்றி அனைவருமே வலியுறுத்தி உள்ளனர்.

கடற்கரையை ஒட்டி நடக்கும் போது ஒரு புத்துணர்ச்சி வருவதன் காரணம். உடலின் தீய சக்திகள் உப்பு காற்றின் மூலம் நீக்கப்படுகின்றன என்கின்றனர்.


உப்பு மனதினை மகிழ்வாக்கும் செரடோனின் சுரக்க உதவு கின்றது. இவர்கள் உப்பினை (ராக்சால்ட், ஸ்ரீமாலயன் சால்ட்) இவைகளை அதிகம் உணவிற்காக சிறிய அளவில் பயன்படுத்துகின்றனர்.

கல் உப்பினை ஒரு கிளாசில் 2 அல்லது 3 பங்கு நிரப்பி கால்பங்கு நீர் சேர்த்து நீங்கள் இருக்கும் அறையில் உங்களுக்கு அருகில் தரையில் வைத்து விடுங்கள். 24, 48 மணி நேரம் அந்த கிளாஸ் அங்கேயே இருக்கட்டும். உங்களை சுற்றியுள்ள தீய சக்திகள் நீங்கும் என்கின்றனர்.

Tags:    

Similar News