கிரிக்கெட் (Cricket)

அபராஜித், தன்வர் அதிரடி: திண்டுக்கல் அணிக்கு 159 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சேப்பாக் அணி

Published On 2024-07-31 15:24 GMT   |   Update On 2024-07-31 15:24 GMT
  • சேப்பாக் அணி தரப்பில் அபராஜித் அரை சதம் விளாசினார்.
  • திண்டுக்கல் அணி தரப்பில் சந்தீப் வாரியர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

திண்டுக்கல்:

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் வெளியேற்றுதல் சுற்றில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றது. இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

அதன்படி சேப்பாக் அணியின் தொடக்க வீரர்களாக சந்தோஷ் குமார் - ஜெகதீசன் ஆகியோர் களமிறங்கினர். இதில் சந்தோஷ் 1 ரன்னில் அவுட் ஆனார். இதனையடுத்து ஜெகதீசன் - அபராஜித் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் விளையாடினர். அதிரடியாக விளையாடிய ஜெகதீசன் 25 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த பிரதோஷ் 19, டேரில் ஃபெராரியோ 4, சித்தார்த் 7 என விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். ஒரு முனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அபராஜித் அரை சதம் கடந்தார்.

இறுதியில் அபராஜித் - அபிஷேக் தன்வர் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். இதனால் 20 ஓவர் முடிவில் சேப்பாக் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் எடுத்தது.

திண்டுக்கல் அணி தரப்பில் சந்தீப் வாரியர் 2 விக்கெட்டும், வருண் சக்கரவர்த்தி, விக்னேஷ், சுபோத் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

Tags:    

Similar News