கிரிக்கெட் (Cricket)

பாகிஸ்தான், வங்கதேசம் 2வது டெஸ்ட்: மழையால் முதல் நாள் ஆட்டம் ரத்து

Published On 2024-08-30 13:34 GMT   |   Update On 2024-08-30 13:34 GMT
  • முதல் டெஸ்டில் பாகிஸ்தானை வங்கதேசம் வீழ்த்தியது.
  • கனமழையால் முதல் நாள் ஆட்டம் டாஸ் கூட போடப்படாமல் ரத்து செய்யப்பட்டது.

ராவல்பிண்டி:

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இதில் முதல் டெஸ்டில் வங்கதேசம் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வரலாறு படைத்தது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் இன்று தொடங்க இருந்தது. ஆனால் அங்கு கனமழை பெய்து வருகிறது.

இதையடுத்து, கனமழை காரணமாக இந்த டெஸ்டின் முதல் நாள் ஆட்டம் டாஸ் கூட போடப்படாமல் ரத்து செய்யப்பட்டது.

Tags:    

Similar News