கிரிக்கெட் (Cricket)

வெளியேற்றுதல் சுற்று: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிராக திண்டுக்கல் பந்து வீச்சு தேர்வு

Published On 2024-07-31 13:29 GMT   |   Update On 2024-07-31 13:29 GMT
  • இதில் வெற்றி காணும் அணி இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் திருப்பூர் அணியுடன் மோதும்.
  • 2-வது தகுதி சுற்று ஆட்டம் வருகிற 2-ந் தேதி சென்னையில் நடக்கிறது.

திண்டுக்கல்:

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் வெளியேற்றுதல் சுற்றில் பாபா அபராஜித் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீசும், ஆர்.அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்சும் இன்று மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

லீக் சுற்று முடிவில் 8 புள்ளிகளுடன் 3-வது இடத்தை பிடித்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி ஏற்கனவே திண்டுக்கல் டிராகன்சை 9 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து இருப்பதால் கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்கும்.

இரு அணிகளும் ஏறக்குறைய சரிசம பலத்துடன் மோதுவதால் யாருடைய கை ஓங்கும் என்பதை கணிப்பது கடினம். இதில் வெற்றி காணும் அணி இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் திருப்பூர் தமிழன்சுடன் வருகிற 2-ம் தேதி சென்னையில் மோதும். தோற்கும் அணி வெளியேறும். 

Tags:    

Similar News