கிரிக்கெட்

இந்திய டெஸ்ட் அணியில் விளையாட விரும்புகிறேன்- சூர்யகுமார் யாதவ்

Published On 2024-08-27 06:26 GMT   |   Update On 2024-08-27 06:26 GMT
  • இந்திய டெஸ்ட் அணியில் என்னுடைய இடத்தை உறுதி செய்யும் வகையில் விளையாட விரும்புகிறேன்.
  • உள்நாட்டு போட்டிகளில் சிறப்பாக விளையாட முயற்சி செய்வேன்.

இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் செயல்பட்டு வருகிறார். டி20 கிரிக்கெட்டில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இவர் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக செயல்படவில்லை. ஒருநாள் போட்டியில் அதிக வாய்ப்பு வழங்கியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. இதனால் ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் இருந்து இவர் களற்றி விடப்பட்டார்.

இந்நிலையில் இந்திய டெஸ்ட் அணியில் என்னுடைய இடத்தை உறுதி செய்யும் வகையில் விளையாட விரும்புகிறேன் என சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

இந்திய டெஸ்ட் அணியில் என்னுடைய இடத்தை உறுதி செய்யும் வகையில் விளையாட விரும்புகிறேன். கடுமையாக உழைத்து புதிதாக வாய்ப்பு பெற்ற இளம் வீரர்கள் தற்போது சிறப்பாக விளையாடி வருகின்றனர். டெஸ்ட் போட்டியில் முன்பே அறிமுகம் ஆகியிருந்தாலும், காயம் காரணமாக தொடர்ந்து விளையாட முடியாமல் போய்விட்டது.

எதிர்வரும் உள்நாட்டு போட்டிகளில் சிறப்பாக விளையாட முயற்சி செய்வேன். பிறகு என்ன நடக்கிறது என்பதை பார்த்துக் கொள்வோம்

இவ்வாறு சூர்யகுமார் யாதவ் கூறினார்.

Tags:    

Similar News