கிரிக்கெட்

INDvsBAN 2-வது டெஸ்ட்: எதிர்ப்புக்கு மத்தியில் நடைபெறும்- பிசிசிஐ தகவல்

Published On 2024-09-12 08:05 GMT   |   Update On 2024-09-12 08:05 GMT
  • இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் 19-ந் தேதி தொடங்குகிறது.
  • 2-வது டெஸ்ட் போட்டிக்கு கான்பூரில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக வங்கதேசம் அணி இந்தியா வரவுள்ளது. முதலில் டெஸ்ட் தொடரும் அதனை தொடர்ந்து டி20 தொடரும் நடைபெற உள்ளது.

இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வருகிற 19-ந் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. அதனை தொடர்ந்து 2-வது டெஸ்ட் போட்டி கான்பூரில் 27-ந் தேதி தொடங்குகிறது.

இந்நிலையில் கான்பூரில் நடக்கும் போட்டியை நடத்த விடாமல் போராட்டம் நடத்த உள்ளதாக மிரட்டல் வந்துள்ளது. இதற்கு திட்டமிட்டப்படி போட்டி எந்தவித எதிர்ப்பும் இன்றி நடைபெறும் என பிசிசிஐ தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிசிசிஐ திட்டங்களில் எந்த மாற்றமும் இல்லை என்றும் கான்பூரில் இரண்டாவது டெஸ்ட் முன்பு அறிவித்தபடி தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து நிலைமையை கண்காணித்து வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News