கிரிக்கெட் (Cricket)

எனக்கு சவால் கொடுத்த பேட்ஸ்மேன்: மனம் திறந்த பும்ரா

Published On 2024-08-30 11:12 GMT   |   Update On 2024-08-30 11:12 GMT
  • இந்திய கிரிக்கெட் அணியின் மேட்ச் வின்னராக பும்ரா உருவெடுத்துள்ளார்.
  • அவரிடம், உங்களுக்கு மிகவும் சவால் கொடுத்த பேட்ஸ்மேன் யார் என கேள்வி எழுப்பப்பட்டது.

சென்னை:

இந்திய அணியின் ஜஸ்பிரித் பும்ரா, தற்போது உலகின் சிறந்த வேகப்பந்து வீச்சாளராக அறியப்படுகிறார். எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழும் அவர், இந்தியாவின் வெற்றிகளில் முக்கிய பங்காற்றி வருகிறார்.

குறிப்பாக, டி20 உலகக் கோப்பையில் தொடர் நாயகன் விருது வென்ற அவர் 17 வருடங்கள் கழித்து இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார். மேலும், இந்திய அணியின் மேட்ச் வின்னராக உருவெடுத்துள்ளார்.

இதனால் தான் அவரை, பும்ரா தலைமுறையில் ஒருமுறை மட்டுமே வரும் பவுலர் என விராட் கோலி பாராட்டினார். அத்துடன் வாசிம் அக்ரம், ரிக்கி பாண்டிங் போன்ற உலகின் பல ஜாம்பவான்கள் பும்ராவை பாராட்டி உள்ளனர்.

இந்நிலையில், ஜஸ்பிரித் பும்ராவுக்கு சென்னையில் சமீபத்தில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. அப்போது, உங்களுக்கு சவால் கொடுத்த பேட்ஸ்மேன் யார்? என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, சிறப்பாக பந்து வீசினால் தம்மை எந்த பேட்ஸ்மேன்களாலும் தடுத்து நிறுத்தமுடியாது என தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது:

இதற்கு நல்ல பதிலைக் கொடுக்க விரும்புகிறேன். இருப்பினும் உண்மையில் யாரும் எனக்கு மேல் இருப்பதை நான் விரும்பவில்லை.

கண்டிப்பாக அனைவரையும் மதிக்கிறேன். ஆனால் என்னுடைய வேலையை சரியாக செய்தால் இந்த உலகில் யாரும் என்னை தடுத்து நிறுத்த டியாது என்று எனது தலைக்குள் எனக்கு நானே சொல்லிக் கொள்கிறேன்.

எனவே நான் எதிரணியை பார்க்காமல் என்னைப் பார்க்கவேண்டும். என்னுடைய அனைத்து விஷயங்களிலும் கட்டுப்பாடு இருந்தால், எனக்கு நானே சிறந்த வாய்ப்புகளைக் கொடுத்தால் மற்ற அனைத்தையும் அதுவே பார்த்துக் கொள்ளும். அதனால் பேட்ஸ்மேன் என்னை விட சிறந்தவர் என்பதுபோல் நினைக்க வேண்டியதில்லை என தெரிவித்தார்.

Tags:    

Similar News