கிரிக்கெட் (Cricket)

சதம் விளாசிய மொமினுல்: 4-ம் நாள் உணவு இடைவேளை வரை வங்கதேசம் 205/6

Published On 2024-09-30 06:58 GMT   |   Update On 2024-09-30 06:58 GMT
  • சிறப்பாக விளையாடிய மொமினுல் சதம் விளாசினார்.
  • இந்தியா தரப்பில் ஆகாஷ் தீப், அஸ்வின் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

கான்பூர்:

வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

இரு அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 280 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னி லையில் உள்ளது.

இந்தியா-வங்காளதேசம் அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் வெள் ளிக்கிழமை தொடங்கியது. முதலில் விளையாடிய வங்காளதேசம் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 107 ரன் எடுத்து இருந்தது. மொமினுல் ஹக் 40 ரன்னும், முஷ்பிகுர் ரகீம் 6 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

மழையால் முதல் நாள் ஆட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டது. 90 ஓவர்களில் 35 ஓவர் மட்டுமே வீச முடிந்தது. 2-வது நாள் போட்டியும், நேற்றைய 3-வது நாள் ஆட்டமும் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.

மழை இல்லாததால் இன்றைய 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மொமினுல் ஹக் அரை சதம் விளாசினார். 11 ரன்கள் எடுத்த நிலையில் முஷ்பிகுர் ரகீமும் 13 ரன்னில் லிட்டன் தாஸும் ஆட்டமிழந்தனர். அதனை தொடர்ந்து வந்த சாஹிப் அல் ஹசன் 9 ரன்னில் வெளியேறினார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மொமினுல் சதம் விளாசி அசத்தினார்.

இதனால் 4-ம் நாள் உணவு இடைவேளை வரை வங்கதேச அணி 6 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா தரப்பில் ஆகாஷ் தீப், அஸ்வின் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Tags:    

Similar News