கிரிக்கெட் (Cricket)

பஞ்சாப் கிங்ஸ் இணை உரிமையாளருக்கு எதிராக வழக்கு தொடர்ந்த ப்ரீத்தி ஜிந்தா

Published On 2024-08-17 03:10 GMT   |   Update On 2024-08-17 03:10 GMT
  • பஞ்சாப் அணிக்கு ஆதரவு தெரிவிப்பதற்கு தவறாமல் ப்ரீத்தி ஜிந்தா நேரில் வந்து விடுவார்.
  • பஞ்சாப் அணியின் இணை உரிமையாளரான ப்ரீத்தி ஜிந்தாவிடம் அந்த அணியின் 23% பங்குகள் உள்ளது.

ஐபிஎல் தொடர்களில் பஞ்சாப் கிங்ஸ் அணி இதுவரை ஒருமுறை கூட கோப்பை வென்றதில்லை. ஆனாலும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் ப்ரீத்தி ஜிந்தா தான்.

ஒருகாலத்தில் பாலிவுட்டில் பிரபல நடிகையாக கோலோச்சிய ப்ரீத்தி ஜிந்தா தற்போது சினிமாவில் இருந்து விலகியுள்ளார். பஞ்சாப் அணிக்கு ஆதரவு தெரிவிப்பதற்கு தவறாமல் ப்ரீத்தி ஜிந்தா நேரில் வந்து விடுவார்.

பஞ்சாப் அணியின் இணை உரிமையாளரான ப்ரீத்தி ஜிந்தாவிடம் அந்த அணியின் 23% பங்குகள் உள்ளது. சக உரிமையாளர்களான மோஹித் பர்மனுக்கு 48% பங்குகளும் நெஸ் வாடியாவிற்கு 23% பங்குகளும் கரண் பாலுக்கு 6% பங்குகளும் உள்ளது.

இந்நிலையில், பஞ்சாப் கிங்ஸ் இணை உரிமையாளரான மோஹித் பர்மன் தனது பங்குகளில் ஒரு பகுதியை மூன்றாம் தரப்பினருக்கு விற்பதைத் தடுக்க கோரி பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தை ப்ரீத்தி ஜிந்தா நாடியுள்ளார். இந்த வழக்கு ஆகஸ்ட் 20ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.

மோஹித் பர்மன் தனது பங்குகளில் 11.5 சதவீதத்தை விற்க உள்ளார் என்றும் இது ப்ரீத்தி ஜிந்தாவிற்கு சாதகமாக இருக்காது என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் இந்த தகவல்களை மோஹித் பர்மன் மறுத்துள்ளார்.

Tags:    

Similar News