கிரிக்கெட்

ஐ.சி.சி. ஒருநாள் தரவரிசை: 2வது இடம் பிடித்து ரோகித் சர்மா அசத்தல்

Published On 2024-08-14 09:09 GMT   |   Update On 2024-08-14 09:11 GMT
  • வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டது.
  • இதில் ரோகித் சர்மா சுப்மன் கில்லை தாண்டி 2-வது இடம் பிடித்துள்ளார்.

துபாய்:

ஒருநாள் போட்டி வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது.

அதில் ஒருநாள் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் பாகிஸ்தானின் பாபர் அசாம் முதலிடத்திலும், இந்தியாவின் ரோகித் சர்மா 2-வது இடத்திலும் உள்ளனர். சுப்மன் கில் 3வது இடத்திலும், விராட் கோலி 4வது இடத்திலும் உள்ளனர்.

ஒருநாள் போட்டிக்கான பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் தென் ஆப்பிரிக்காவின் கேசவ் மகாராஜ் முதல் இடத்தில் உள்ளார்.

இந்திய வீரர் குல்தீப் யாதவ் 4-வது இடம் பிடித்துள்ளார். பும்ரா 8வது இடத்தில் உள்ளார்.

ஒருநாள் ஆல் ரவுண்டர் தரவரிசையில் வங்கதேசத்தின் முகமது நபி முதல் இடத்தில் உள்ளார். முதல் 10 இடங்களில் இந்திய வீரர் ஒருவர் கூட இடம்பெறவில்லை. ஜடேஜா 16வது இடத்தில் உள்ளார்.

Tags:    

Similar News