கிரிக்கெட் (Cricket)

மகளிர் டி20 உலகக் கோப்பை: முதல் அரையிறுதியில் தென் ஆப்பிரிக்கா- ஆஸ்திரேலியா நாளை மோதல்

Published On 2024-10-16 16:26 GMT   |   Update On 2024-10-16 16:26 GMT
  • மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி ஆட்டங்கள் நாளை தொடங்குகின்றன.
  • இறுதிப்போட்டி வரும் 20-ம் தேதி துபாயில் நடைபெறுகிறது.

துபாய்:

9-வது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது. தொடரின் லீக் ஆட்டங்களின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடித்த ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், இங்கிலாந்து, வங்காளதேசம், ஸ்காட்லாந்து அணிகள் தொடரில் இருந்து வெளியேறின.

இந்நிலையில், இந்த தொடரின் அரையிறுதி ஆட்டங்கள் நாளை தொடங்குகின்றன. நாளை துபாயில் நடைபெறும் முதல் அரையிறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா-ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன. இரு அணிகளும் இறுதிப்போட்டிக்கு முன்னேற கடுமையாக போராடும் என்பதால் நாளைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. நாளை மறுநாள் நடைபெறும் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் - நியூசிலாந்து அணிகள் சார்ஜாவில் மோத உள்ளன. இந்த தொடரின் இறுதிப்போட்டி வரும் 20-ம் தேதி துபாயில் நடைபெறுகிறது.

Tags:    

Similar News